fbpx

’ஏ.ஐ. தொழில்நுட்பம் 21ஆம் நூற்றாண்டை அழித்துவிடும்’..!! பிரதமர் மோடி எச்சரிக்கை..!!

ஏ.ஐ. தொழில்நுட்பம் 21ஆம் நூற்றாண்டை அழித்து விடும் அபாயம் உள்ளதாக பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டின் உலகளாவிய கூட்டமைப்பில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்த அபாயத்தை அவர் எடுத்துரைத்தார். அப்போது, “பயங்கரவாதிகளின் கைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) சென்று சேரும் பட்சத்தில் உலகளவில் அச்சுறுத்தலாக மாறிவிடும். எனவே, ஏ.ஐ தொழில்நுட்பத்தின் நெறிமுறை பயன்பாட்டிற்கான உலகளாவிய கட்டமைப்பு தேவை.

ஏ.ஐ தொழில் நுட்பத்தை 21ஆம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கான மிகப்பெரிய கருவியாக மாற்ற முடியும். அதே சமயம் 21ஆம் நூற்றாண்டை அழிப்பதிலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் ஒரு சக்தியாகவும் இருக்கும். டீப் ஃபேக், சைபர் பாதுகாப்பு மற்றும் தரவு திருட்டு போன்ற சவால்களைத் தவிர, ஏ.ஐ தொழில்நுட்பம் பயங்கரவாதிகளின் கைகளில் சென்று கிடைத்து விடக்கூடாது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

மேலும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! மக்களே இந்த வாய்ப்பை விட்றாதீங்க..!!

Wed Dec 13 , 2023
டிசம்பர் மாதத்தில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று டிசம்பர் 12ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையான நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 13) கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.45,600-க்கும் […]

You May Like