fbpx

காத்திருந்து காதலியின் கதையை முடித்த காதலன்..!! துடிதுடித்து பலியான சோகம்..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த ராதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தரணி (19). இந்த இளம்பெண் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது, வாலிபர் ஒருவர் தரணியை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து தரணி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் இந்த கொலை அரங்கேறியது தெரியவந்தது.

இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், குற்றவாளியை கைது செய்தனர். விசாரணையில், அவர் மதுரபாக்கத்தைச் சேர்ந்த 25 வயது வாலிபர் கணேசன் என்பது தெரியவந்துள்ளது. போலீசார் கொலையாளியை தேடிச்சென்ற போது புதுவை மாநிலம் திருக்கனூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. விக்கிரவாண்டி போலீசார் திருக்கனூரில் பதுங்கி இருந்த கணேசனை கைது செய்துள்ளனர். கொலையாளி இடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்துள்ளனர். கொலை நடந்த 2 மணி நேரத்திலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், கடந்த 4ஆண்டுகளாக தரணியை காதலித்து வந்ததாகவும், ஒரு வருடமாக தன்னிடம் பேசுவதை தவிர்த்து வந்து விட்டார் என்பதாலும் ஆத்திரத்தில் அவரை கொலை செய்ததாக கூறியுள்ளார்.

தரணியும் கணேசனும் ஆரம்பத்தில் காதலித்து வந்தாலும் பின்னர் கஞ்சா, மதுவுக்கு அடிமையாகி கணேசன் பாதை மாறிப் போனதால் அவருடன் பேசுவதை தரணி தவிர்த்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. தரணி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து உறவினர்களும் ஊராரும் போலீசாரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ராதாபுரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Chella

Next Post

அந்தரங்க பகுதியை காட்டி இளம்பெண்ணுக்கு ஆசையை தூண்டிய பாதிரியார்..!! பரபரப்பு புகார்..!!

Fri Mar 17 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அடுத்த பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ (29). இவர், குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக இருந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தக்கலை அடுத்த பிலாங்காலை சர்ச் பாதிரியாராக பொறுப்புக்கு வந்திருக்கிறார். இந்நிலையில், பாதிரியார் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் அப்பில் அனுப்பிய […]

You May Like