fbpx

SCAM| பால் சந்தாவை நிறுத்தச் சென்றவருக்கு ஷாக்.. ரூ.99,000/- ஆட்டையை போட்ட ஆன்லைன் திருடர்கள்.!

பெங்களூரில், 68 வயது முதியவர், ஆன்லைன் மளிகை கடையில் பால் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார். நான் சில நாட்களுக்கு வெளியூர் செல்வதால் பால் வாங்குவதற்கான சந்தாவை நிறுத்த முயன்ற போது, ஒரு மர்ம நபரிடம் ரூ.99 ஆயிரத்தை இழந்திருக்கிறார். இந்த SCAM குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த 68 வயது முதியவர், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆன்லைன் ஸ்டோரில் தினமும் ஒரு லிட்டர் பால் வாங்கி வந்துள்ளார். அவர் வெளியூருக்கு செல்வதால், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, பால் வாங்குவதற்கான சந்தாவை நிறுத்த முயன்றுள்ளார். மளிகை கடையில் இரண்டு தொடர்பு எண்களையும் தொடர்பு கொண்ட போது, இரண்டுமே பிசியாக இருந்ததால் அதற்கான மாற்றி எண்ணை இணையத்தில் தேடி, ‘7388823702’ என்ற தொலைபேசி எண்ணைப் பெற்றுள்ளார்.

இவர் அந்த எண்ணைத் தொடர்பு கொண்ட போது, மறுமுனையில் பேசி மர்ம நபர் தன்னை கடையின் நிர்வாகி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் ஹிந்தியில் பேசிய அவர், சந்தாவை நிறுத்த தொலைநிலை அணுகல் பயன்பாட்டைப் பதிவிறக்குமாறு அந்த முதியவரிடம் கூறியுள்ளார். பதிவிறக்கிய பின், டிஜிட்டல் கட்டண விண்ணப்பத்தை (DPA) PhonePe ஐத் திறப்பது உட்பட மேலும் சில படிகளைப் பின்பற்றும்படி அறிவுறுத்தியுள்ளார்.

பின்னர் ‘பணத்தை மொபைல் எண்ணுக்கு மாற்றவும்’ விருப்பத்தில் தனது மொபைல் எண்ணை உள்ளிடும்படி அந்த மர்ம நபர் கூறியுள்ளார். பின்னர் முதியவரின் மொபைல் என்னுடைய முதல் ஐந்து இலக்கங்களை என்டர் செய்ய கூறியுள்ளார். ‘98868’ என உள்ளிட்ட சில நொடிகளில், முதியவரின் வங்கி கணக்கில் இருந்து அந்த தொகை டெபிட் ஆகியுள்ளது.

இதைப் பற்றி முதியவர் கேட்டபோது, ஏதோ தவறு நடந்து விட்டதாகவும் நான் அந்த பணம் திரும்பி வந்து விடும் என்றும் அந்த மர்ம நபர் கூறியுள்ளார். தான் ஏமாந்து விட்டதை உணர்ந்த அந்த முதியவர், இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். “இந்திய தண்டனைச் சட்டத்தின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வரும் பிரிவுகளான 419 (தனிப்பட்ட முறையில் ஏமாற்றுதல்) மற்றும் 420 (ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்தை வழங்குதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

English summary: An old man lost, Rs.99,000/- when he tried to stop the subscription for buying milk from an online store.

Read More: ‘YouTube’ பார்த்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்.! சிசிடிவி காட்சிகளால் சிக்கிய வினோதம்.! பரபரப்பு தகவல்.!

Next Post

Memorial | கலைஞர் நினைவிடம் திறப்பு..!! எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த முதல்வர்..!!

Thu Feb 22 , 2024
கலைஞர் நினைவிடம் 26ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கலைஞர் நினைவிடத்தில் கட்டுமான பணிகள் முடிவடைந்து விட்டதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், வரும் 26ஆம் தேதி கலைஞர் நினைவிட திறப்பு விழாவுக்கு பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். கலைஞர் நினைவிடத்தில் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும் பேரவையில் முதலமைச்சர் பேசினார். முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், ”முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் வரும் […]

You May Like