fbpx

குழந்தைக்கு பூச்சியை உணவாக கொடுக்கும் தாய்!… என்ன காரணம் தெரியுமா? அதிர்ச்சியும்! ஆச்சரியமும்!

கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைக்கு பூச்சியை கலந்து உணவாக கொடுத்த சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கனடா டொராண்டோவைச் சேர்ந்த உணவு எழுத்தாளர் டிஃப்பனி லே என்பவர், தனது குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு வழிகளில் பரிசோதனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, அவர் தனது 18 மாத குறுநடை போடும் குழந்தையின் உணவில் கிரிக்கெட் என்ற ஒரு வகை பூச்சியை சேர்க்க முடிவு செய்தார்.

குழந்தைக்கு புரத சத்து கிடைக்கவும், குடும்பத்தின் மளிகைக் கட்டணத்தைக் குறைக்கவும் இந்த வகை பூச்சிகளை சேர்ப்பதை ஏற்றுக்கொண்டதாக அந்தப் பெண் கூறினார். இதுகுறித்து பேசிய அவர் ” உணவு எழுத்தாளர் என்ற முறையில், நான் எப்பொழுதும் பூச்சிகளை உண்ணுதல் உள்ளிட்ட எதையும் முயற்சி செய்து வருகிறேன். தேள் உள்ளிட்ட பல பூச்சிகளை நான் உணவில் சேர்த்துள்ளேன். விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில், கிரிக்கெட் பூச்சி தின்பண்டங்கள், கிரிக்கெட் புரோட்டீன் பவுடர் மற்றும் முழு வறுத்த கிரிக்கெட்டு பூச்சிகள் என பல வகை உணவில் இருந்து புரோட்டீனை பெற முடிவு செய்தேன்.”

இதனால் எனது மளிகைச் செலவுகளை வாரத்திற்கு சுமார் 8,000 குறைத்தேன். இந்த மாற்றத்திற்கு முன்பு செலவுகள் வாரத்திற்கு சுமார் 25 ஆயிரமாக இருந்தது. இப்போது அது 8,000 வரை குறைந்துள்ளது.” என்று தெரிவித்தார். மேலும் அந்த மாற்றத்திற்குத் தன் குழந்தை எப்படித் தகவமைத்துக் கொண்டது என்பதைப் பற்றிப் பேசிய அந்தப் பெண், தன் குழந்தை பூச்சியைப் பார்க்க பயப்படவில்லை என்று கூறினார். தனது குழந்தை புதிய உணவை அச்சமின்றி முயற்சி செய்யக்கூடிய வயதில் இருப்பதாகவும் அவர் கூறினார். பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் வீனஸ் கலாமியின் கூற்றுப்படி, மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு 6 மாத வயதை எட்டியவுடன் பூச்சிகளை ஊட்டலாம் என்றும் டிஃப்பனி லே குறிப்பிட்டார்.

Kokila

Next Post

பிரியாணி அரிசியை கழிவறையில் கழுவும் ஹோட்டல் ஊழியர்கள்!... தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!... வைரலாகும் வீடியோ!

Thu Apr 27 , 2023
தெலங்கானாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரியாணி சமைப்பதற்காக அரிசியை கழிவறையில் கழுவிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலங்கானா சித்திப்பேட்டையில் இயங்கி வரும் தனியார் ஹோட்டல் ஒன்றில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பிரியானி செய்வதற்கான அரிசியை கழிவறையில் அலசியுள்ளனர். இதை அறிந்த வாடிக்கையாளர்கள் இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.அப்போது, ஹோட்டலுக்கு தண்ணீர் கொண்டு வரும் மோட்டார் பழுதடைந்துவிட்டதால் தண்ணீர் வரவில்லை. அதனால் ஹோட்டலில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று […]

You May Like