fbpx

உயிருக்கு போராடிய தாய்..!! கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்..!! ICU வார்டில் திருமணம்..!! பின்னர் நடந்த சோகம்..!!

உயிருக்கு போராடிய தாயின் கண்முன்பு ICU வார்டில் மகளின் திருமணம் நடைபெற்றுள்ளது.

பீகார் மாநிலம் பாலி என்ற கிராமத்தில் லாலன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூனம் வர்மா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சாந்தினி குமாரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களாக பூனம் வர்மா இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால், அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் ஐசியுவில் அவரது சிகிச்சை அளிக்கப்பட்டது.

உயிருக்கு போராடிய தாய்..!! கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்..!! ICU வார்டில் திருமணம்..!! பின்னர் நடந்த சோகம்..!!

இதனையடுத்து, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரிந்துவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட பூனம் வர்மா தனது கடைசி ஆசையாக மகளின் திருமணத்தை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில், சாந்தினி குமாரிக்கும், ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கும் ஐசியுவிலேயே பூனம் வர்மாவின் கண்முன்னே திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி 2 மணி நேரத்திலேயே பூனம் வர்மா உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

’நாங்க அப்படி இருக்கும்போது என் புருஷன் பாத்துட்டாரு’..!! கணவன் உடலில் கல்லைக்கட்டி கிணற்றில் வீசிய மனைவி..!!

Tue Dec 27 , 2022
கணவன்-மனைவி இருவருமே காவல்துறையில் பணியாற்றி வந்த நிலையில், கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படை உதவியுடன் கணவன் உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார் பெண் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர். கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். போலீஸ் ஏட்டுவான இவர் பணி காலத்தின் போது குற்ற செயல்களில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டார். இவரின் மனைவி சித்ரா சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு சப் […]
’நாங்க அப்படி இருக்கும்போது என் புருஷன் பாத்துட்டாரு’..!! கணவன் உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசிய மனைவி..!!

You May Like