fbpx

’குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர்’..! உலக சுகாதார அமைப்பு முக்கிய தகவல்..!

குரங்கு அம்மை எனப்படும் மங்கிபாக்ஸ் நோய்க்கு புதிய பெயரை பரிந்துரைக்கும்படி உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட மங்கிபாக்ஸ் நோயால் உலகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கம்மை நோய் சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில், குரங்கு அம்மை நோயின் பெயர் இனவெறியைத் தூண்டுவதாகவும், பாரபட்சமாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறி வந்ததால், வைரஸ் நோய்களுக்கு புவியியல் ரீதியாக பெயர் வைப்பதை தவிர்த்து ரோமன் நம்பர்களை பயன்படுத்தி பெயர் சூட்ட உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.

’குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர்’..! உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்..!

அதன்படி, குரங்கு அம்மை நோய் மற்றும் வைரஸ் பெயர்களுக்கு பொதுமக்களிடம் இருந்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன. மேலும், மாறுபாடு கொண்ட குரங்கு அம்மைகளுக்கு பிராந்திய அடிப்படையிலான பெயர்களுக்குப் பதிலாக, புதிய பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மத்திய ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு கிளேட் 1 என்றும், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு கிளேட் 2 எனவும் உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டியுள்ளது.

Chella

Next Post

மின்சார சட்டத் திருத்தத்தால் இலவச மின்சாரம் ரத்தா..? மத்திய மின்சாரத்துறை செயலர் பரபரப்பு பதில்..!

Sun Aug 14 , 2022
இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுவது கட்டுக்கதை என்று மத்திய மின்சாரத்துறை செயலாளர் அலோக்குமார் தெரிவித்துள்ளார். மின்சார சட்டத்திருத்த மசோதா தொடர்பாக மத்திய மின்சாரத்துறை செயலாளர் அலோக் குமார் நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், ”மின்சார சட்டத்தில் எந்த இடத்திலும் இலவச மின்சாரம் பற்றிக் குறிப்பிடவில்லை. 65-வது பிரிவில், மாநில அரசுகள் எந்த தரப்பு நுகர்வோருக்கும் மானிய விலையில் மின்சாரம் வழங்கலாம். சட்டத்திருத்தத்தில் அந்த பிரிவில் எந்த […]
மின்சார சட்டத் திருத்தத்தால் இலவச மின்சாரம் ரத்தா..? மத்திய மின்சாரத்துறை செயலர் பரபரப்பு பதில்..!

You May Like