fbpx

முகத்தில் மிளகாய் பொடியை தூவி, தலையை துண்டாக்கிய ஒருதலை காதலன்..!! திடுக்கிடும் சம்பவம்..!!

எட்டயபுரத்தில் திருமணமான சில நாட்களிலேயே புது மாப்பிள்ளை தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் டிவி பழுது பார்க்கும் கடையில் வேலைபார்த்து வந்த ராகவன் என்பவருக்கும், அந்த கடைக்குப் பக்கத்தில் உள்ள தட்டச்சுப் பயிற்சி பள்ளியில் படித்து வந்த மகாலட்சுமி என்பவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது. இந்த காதல் உறவை நிரந்தர வாழ்க்கையாக வடிவமைக்க இருவரும் ஆசைப்பட்டுள்ளனர். வெவ்வேறு சாதி அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மிகப்பெரிய நெடிய போராட்டத்தை சந்திக்க நேரிட்டது. பெற்றோரின் தீவிர எதிர்ப்பைத் தாண்டி, இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

முகத்தில் மிளகாய் பொடியை தூவி, தலையை துண்டாக்கிய ஒருதலை காதலன்..!! திடுக்கிடும் சம்பவம்..!!

இந்நிலையில், எட்டயபுரம் சோழபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (22) என்பவர் மகாலட்சுமியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தனது விருப்பத்தை, மகாலட்சுமியிடம் எடுத்தும் கூறியுள்ளார். ஆனால், மகாலட்சுமி ராகவனுடனான தனது காதல் நிலைப்பாட்டைக் கூறி விளக்கியுள்ளார். இதை காதல் புறக்கணிப்பாக மட்டும் ஆனந்தராஜ் பார்க்கவில்லை. மாறாக, ஒரே சாதியைச் சேர்ந்த தன்னை காதலிக்காமல் வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரை எப்படி காதலிக்க முடியும் என்ற சாதிய வன்மமும் அவருக்கு இருந்துள்ளது. அதனால், இருவர் மீதும் அவருக்கு தீராப் பகை ஏற்பட்டது.

முகத்தில் மிளகாய் பொடியை தூவி, தலையை துண்டாக்கிய ஒருதலை காதலன்..!! திடுக்கிடும் சம்பவம்..!!

இதன் காரணமாக, ராகவனை கொலை செய்ய திட்டம் தீட்டினார் ஆனந்த்ராஜ். அதன்படி, பழுதான எல்.இ.டி. டிவி ஒன்றை ராகவன் வேலை பார்க்கும் கடையில் ஒரு வாரத்திற்கு முன்பு ஆனந்த்ராஜ் கொடுத்துள்ளார். இதைதொடர்ந்து திட்டமிட்டபடி நேற்று கடைக்குள் நுழைந்த அவர், ஒரு பையில் ஆடு வெட்டும் கத்தி, மிளகாய் பொடி ஆகியவற்றுடன் வந்துள்ளார். மிளகாய் பொடியை ராகவன் முகத்தில் வீசி, கத்தியால் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார் ஆனந்த்ராஜ். தலை துண்டான நிலையில், ரத்தவெறி பிடித்த வேங்கையாக அங்கிருந்து சென்றுள்ளார். இதையடுத்து, எட்டயுபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த்ராஜை கைது செய்தனர். மிகக் கொடூரமாக நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

’பாராளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல’..! அண்ணாமலை எச்சரிக்கை

Tue Sep 27 , 2022
“இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள்… 2024 பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்ட சபை தேர்தல் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல” என்று அண்ணாமலை பேசியுள்ளார். ஆ.ராசாவுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, சிவானந்தா காலணி பகுதியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் […]

You May Like