ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியின் கீழ் பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.. அதன் ஒரு பகுதியாக, நான்கு பேர் கொண்ட குழு ஒரு நபரை உயிருடன் எரித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன… மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இதையடுத்து இந்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.. குசாரா மாவட்டத்தில் அந்த 4 பேரும் கைது செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளனர்..
இதனிடையே ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை பிடித்ததில் இருந்து, பெண்களின் நிலை மோசமடைந்து வருவதாகவும், பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன என்றும் ஐக்கிய நாடுகளின் உதவிக் குழு அமைப்பு தெரிவித்துள்ளது..
ஆனால் இதனை தலிபான் அரசு விமர்சித்துள்ளது.. மனித உரிமைகள் என்ற பெயரில் சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தான் பெண்களின் கண்ணியத்தை மீற முயற்சிப்பதாக தலிபான் திங்கள்கிழமை குற்றம் சாட்டியுள்ளது. துணை மற்றும் நல்லொழுக்கத்தின் செயல் அமைச்சர், முகமது காலிட் ஹனாபி, வடக்கு மாகாணமான ஃபரியாப்பில் ஒரு கூட்டத்தில் பேசுகையில், ” ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் பெரும்பாலும் சர்வதேச சமூகத்தால் மீறப்பட்டுள்ளன.. உலகம் நமது சகோதரிகளின் கண்ணியத்தை சீர்குலைத்து அவர்களை அநாகரீகமாகவும் அம்பலப்படுத்தவும் விரும்புகிறது. இது என்ன வகையான உரிமை? ஒரு ஆணும் பெண்ணும் ஒரே நாற்காலியில் உட்கார வேண்டும் என்று சர்வதேச சமூகம் விரும்புகிறது – நமது தேசமோ, நமது நம்பிக்கையோ, மதமோ இதை ஆதரிக்காது.. ” என்று அவர் கூறினார்.