fbpx

பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீஸிடம் பாலியல் சீண்டல் செய்த பிரமுகர்

வளசரவாக்கம் ராமாபுரத்தைச் சேர்ந்த கண்ணன் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். ராமாபுரம் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்ற போது, திருவிழா பாதுகாப்பு பணிக்காக ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் இருந்து பெண் போலீசார் சென்றுள்ளனர். அப்போது ஒரு பெண் போலீசிடம், கண்ணன் பாலியல் சீண்டலில் ஈடபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் போலீஸ், ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்ணனை கைது செய்து விசாரித்தனர். அதில் கைது செய்யப்பட்ட கண்ணன் தி.மு.க. பிரமுகர் என்பதும், பெண் போலீசிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் உறுதியானது. இதையைடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது?

Maha

Next Post

என்னது..!! சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறாரா..? பரபரப்பை கிளப்பிய அழைப்பிதழ்..!!

Sun Aug 6 , 2023
சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தடகள சங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக வெளியாகியுள்ள அழைப்பிதழ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 2-வது மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டி துவக்க விழா நாளை நடைபெறவுள்ளது. கரூர் தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ள இந்த விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதன்ம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக […]

You May Like