வளசரவாக்கம் ராமாபுரத்தைச் சேர்ந்த கண்ணன் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். ராமாபுரம் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்ற போது, திருவிழா பாதுகாப்பு பணிக்காக ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் இருந்து பெண் போலீசார் சென்றுள்ளனர். அப்போது ஒரு பெண் போலீசிடம், கண்ணன் பாலியல் சீண்டலில் ஈடபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் போலீஸ், ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்ணனை கைது செய்து விசாரித்தனர். அதில் கைது செய்யப்பட்ட கண்ணன் தி.மு.க. பிரமுகர் என்பதும், பெண் போலீசிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் உறுதியானது. இதையைடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது?