fbpx

பிரதமரின் படம் இல்லாமல் போஸ்டரா? செஸ் ஒலிம்பியாட் போஸ்டரில்.. பிரதமரின் படத்தை ஒட்டிய பாஜகவினர்..!

தமிழகத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 28-ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நாளை முதல் ஆகஸ்டு 10-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த போட்டித்தொடரின் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நாளை நடைபெறவுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் போஸ்டர், பேனர் என விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போஸ்டர்களில் பிரதமர் மோடி அவர்களின் புகைப்படமோ அல்லது பெயரோ இடம்பெறவில்லை, இதை பார்த்த பாரதிய ஜனதா கட்சியினர் கண்டித்து வந்தனர்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படம் தவிர்க்கப்பட்டுள்ள போட்டிக்கான அரசு விளம்பர பேனர்களில், சென்னை, அடையாறு உள்ளிட்ட இடங்களில், பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டுத் திறன் அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி பாரத பிரதமர் மோடியின் படத்தை ஓட்டினார். அதுமட்டுமல்லாமல் சென்னையில் எல்லா இடங்களிலும் உள்ள ஒலிம்பியாட் போஸ்டர்களிலும் மோடியின் படத்தை ஒட்ட வேண்டும் எனபாஜக நிர்வாகிகளுக்கு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி போஸ்டரில் பிரதமர் மோடியின் படம் ஒட்டப்பட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Rupa

Next Post

மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பிய சென்னை மாநகர பேருந்துகள்..! தினசரி 31 லட்சம் பேர் பயணம்..!

Wed Jul 27 , 2022
சென்னை மாநகர பேருந்துகளில் தினசரி பயணம் செய்வோரின் எண்ணிக்கை 31 லட்சமாக அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மாநகர பேருந்து, மின்சார ரயில் சேவை, ஆட்டோ ஆகியவை முக்கிய அங்கம் வகிக்கிறது. மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் 3,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கொரோனா பாதிப்புக்கு முன்பு வரை மாநகர பேருந்துகளில் தினமும் 32 லட்சம் பேர் பயணம் செய்தனர். கொரோனா தொற்றால் பயணிகள் எண்ணிக்கை […]
’இனி ஆக்‌ஷன் சீன் தான்’..!! பேருந்து படிக்கட்டில் பயணித்தால்..!! ஓட்டுநர், நடத்துனருக்கு அதிரடி உத்தரவு..!!

You May Like