ஆப்கானிஸ்தானின் காபூலில் இன்று காலை 6.05 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவ 5.3 ஆக பதிவாகியுள்ளது. இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ள இந்தியாவின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம், நிலநடுக்கத்தின் நீளம்: 65.58, ஆழம்: 130 கிமீ என குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வுகளின்படி, இந்த நிலநடுக்கம் ஆப்கானித்தான் மற்றும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிக்கு அருகில் ஏற்பட்டதாகவும் இது இரு நாடுகளையும் பாதித்ததாகவும், இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு கந்தஹார் பகுதியில் உணரப்பட்டதாகவும், ரிக்டர் அளவு 5.3 முதல் 5.6 வரை இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.