தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை 3.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 அடி ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்படுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் மேற்கு பகுதியிலும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.