fbpx

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இளைஞர்களை குறிவைத்த காதல் ஜோடி..!! அழகிய படங்களை காட்டி ஆஃப் செய்த இளம்பெண்..!!

சமூக வலைதளங்களில் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து, இளைஞர்களுக்கு காதல் வலைவிரித்த இளம்பெண், போலீசிடம் சிக்கினார்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், கித்தலூரில் வசித்து வருபவர் பராசா தனுஸ்ரீ (27). இவரும் அதேபகுதியை சேர்ந்த பரசா ரவி தேஜா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். காதலர்களான இருவரும் கடந்த சில வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இருவரும் சொகுசான வாழ்க்கை வாழ திட்டமிட்டுள்ளனர். இதற்காக சமூக வலைதளங்களில் இளைஞர்களை குறிவைத்து போலி கணக்குகள் தொடங்கினர். தனுஸ்ரீ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் 4 கணக்குகளை தொடங்கி, அதில் அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இளைஞர்களை குறிவைத்த காதல் ஜோடி..!! அழகிய படங்களை காட்டி ஆஃப் செய்த இளம்பெண்..!!

இந்நிலையில், குறுகிய காலத்தில் அவரின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகரித்தது. இதில், கமெண்ட் செய்பவர்களில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பதில் அளித்து பழக்கப்படுத்திக் கொண்டு போன் நம்பர் வாங்கி அவர்களிடம் இனிமையான வார்த்தைகளை பேசி, காதல் வலை விரித்துள்ளார். அவரது காதல் வலையில் விழுந்ததும் அவர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி நம்ப வைத்துள்ளார். அதன் பின்னர் அவரது தாயின் உடல்நிலை சரியில்லை, வீட்டுக்கடனின் தவணை கட்ட வேண்டும் என பல உருட்டுகளை உருட்டி பணம் கேட்டு வாங்கியுள்ளார். 8 மாதங்களில் ரூ.31.66 லட்சத்தை இளைஞர்களிடம் பெற்றுள்ளார். தனுஸ்ரீயிடம் தெலங்கானாவை சேர்ந்த இளைஞர் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். இதற்கு எந்தவித பதிலும் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ராச்சகொண்டா சைபர் கிரைமில் புகார் அளித்தார்.

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இளைஞர்களை குறிவைத்த காதல் ஜோடி..!! அழகிய படங்களை காட்டி ஆஃப் செய்த இளம்பெண்..!!

காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் தனுஸ்ரீ அவரது காதலன் ரவிதேஜா இருவரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து இருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சேர்ந்து இதுவரை பல இளைஞர்களை ஏமாற்றி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மெடிப்பள்ளி காவல் நிலையத்தில் ஏற்கனவே இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ராச்சகொண்டா சைபர் கிரைம்  இன்ஸ்பெக்டர் பி.ராஜூ தெரிவித்தார்.

Chella

Next Post

’இந்த 2 நாட்களும் கொஞ்சம் கவனமா இருங்க மக்களே’..!! அலெர்ட் கொடுத்த வானிலை மையம்..!!

Tue Dec 20 , 2022
தமிழ்நாட்டில் டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இது அடுத்த 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு […]
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை மையம் புதிய தகவல்..!!

You May Like