திருவனந்தபுரம் வர்க்கலா பகுதியில் காதலை கைவிட மறுத்த இளைஞரை அவரது காதலி மற்றும் காதலியின் காதலன் குண்டர்களுடன் இணைந்து நிர்வாணமாக கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பி சி ஏ முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரை காவல் துறை கைது செய்து இருக்கிறது. திருவனந்தபுரத்தைச் சார்ந்த இளைஞர்களும் லட்சுமி பிரியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர் இந்நிலையில் அந்த மாணவி மேற்படிப்புக்காக எர்ணாகுளம் சென்று இருக்கிறார். அப்போது எர்ணாகுளத்தில் உள்ள ஒரு இளைஞருடன் காதல் ஏற்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை காதலித்து வந்திருக்கிறார் அந்தப் பெண்.
ஆனால் திருவனந்தபுரத்திலிருந்த இளைஞரும் அந்தப் பெண்ணை மறக்காமல் காதலித்து வந்திருக்கிறார். இது அந்த பெண்ணிற்கு தொந்தரவாகவே இருந்திருக்கிறது. அவர் எவ்வளவோ முயற்சித்து கேட்டும் இந்த இளைஞர் மறக்காததால் ஆத்திரமடைந்த அந்த பெண் தன்னுடைய காதலன் மற்றும் சில குண்டர்களுடன் அந்த இளைஞரை கடத்தி வர்க்கலா பகுதியில் நிர்வாணமாக்கி அடித்து உதைத்து காதலை கைவிடச் சொல்லி இருக்கின்றனர். ஆனால் அந்த இளைஞர் முழுவதுமாக மறுத்து விட்டார். இதனைத் தொடர்ந்து அவரை கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர். இந்த வளர்ப்பு தொடர்பாக லட்சுமி பிரியா என்ற பெண்ணை காவல்துறை கைது செய்திருக்கிறது.