fbpx

‘ப்ரேக் அப்” க்கு ‘நோ’ சொன்ன காதலனை நிர்வாணமாக்கி அடித்து உதைத்த காதலி! காதலனுடன் செய்த செயல்!

திருவனந்தபுரம் வர்க்கலா பகுதியில் காதலை கைவிட மறுத்த இளைஞரை அவரது காதலி மற்றும் காதலியின் காதலன் குண்டர்களுடன் இணைந்து நிர்வாணமாக கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பி சி ஏ முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரை காவல் துறை கைது செய்து இருக்கிறது. திருவனந்தபுரத்தைச் சார்ந்த இளைஞர்களும் லட்சுமி பிரியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர் இந்நிலையில் அந்த மாணவி மேற்படிப்புக்காக எர்ணாகுளம் சென்று இருக்கிறார். அப்போது எர்ணாகுளத்தில் உள்ள ஒரு இளைஞருடன் காதல் ஏற்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை காதலித்து வந்திருக்கிறார் அந்தப் பெண்.

ஆனால் திருவனந்தபுரத்திலிருந்த இளைஞரும் அந்தப் பெண்ணை மறக்காமல் காதலித்து வந்திருக்கிறார். இது அந்த பெண்ணிற்கு தொந்தரவாகவே இருந்திருக்கிறது. அவர் எவ்வளவோ முயற்சித்து கேட்டும் இந்த இளைஞர் மறக்காததால் ஆத்திரமடைந்த அந்த பெண் தன்னுடைய காதலன் மற்றும் சில குண்டர்களுடன் அந்த இளைஞரை கடத்தி வர்க்கலா பகுதியில் நிர்வாணமாக்கி அடித்து உதைத்து காதலை கைவிடச் சொல்லி இருக்கின்றனர். ஆனால் அந்த இளைஞர் முழுவதுமாக மறுத்து விட்டார். இதனைத் தொடர்ந்து அவரை கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர். இந்த வளர்ப்பு தொடர்பாக லட்சுமி பிரியா என்ற பெண்ணை காவல்துறை கைது செய்திருக்கிறது.

Baskar

Next Post

“ நான் பாஜகவுக்கு ஒருபோதும் பயப்பட மாட்டேன்.. எனக்கு எதிராக எது நடந்தாலும்.. ” ராகுல்காந்தி பேச்சு..

Tue Apr 11 , 2023
மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.. இதையடுத்து ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.. இதை தொடர்ந்து சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி நேற்று மேல்முறையீடு செய்துள்ளார்.. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணை முடியும் வரை ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட சிறைதண்டனை நிலுவையில் வைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.. இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 13-ம் தேதி […]
2024 மக்களவை தேர்தல்..!! பிரதமரை தொடர்ந்து ராகுல் காந்தியும் தமிழகத்தில் போட்டி..?? வெளியான பரபரப்பு தகவல்..!!

You May Like