fbpx

விவசாயிகளுக்கென தனி இணையதளம் ‘சாரதி’!… பயிர் காப்பீடு தொடர்பான திட்டங்கள், குறைகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்!

பயிர் காப்பீடு தொடர்பான குறைகளை தீர்க்க, காப்பீட்டு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை விவசாயிகள் பெறும் வகையில் ‘சாரதி’ எனும் இணையதள பக்கத்தை மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தொடங்கிவைத்தார்.

இந்தியாவின் விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்காக வடிவமைக்கப்பட்ட பி.எம்.எப்.பி.ஒய்., எனப்படும் ‘பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம்’ மற்றும் அது சார்ந்த பிற காப்பீட்டு திட்டங்களின் விரிவான தொகுப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, ‘சாரதி’ என்ற இணையதள பக்கத்தை அமைச்சர் அர்ஜுன் முண்டா துவக்கி வைத்தார். அத்துடன் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் குறை தீர்ப்பு நடைமுறைகளை வலுப்படுத்தவும், விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கவும், ‘க்ரிஷி ரக்ஷக்’ என்ற ஒரு இணையதளத்தையும், 14447 என்ற உதவி மைய எண்ணையும் அவர் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் முண்டா பேசியதாவது: இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான முயற்சியில், வேளாண் அமைச்சகம் ஒன்றிணைந்து செயலாற்றி வருகிறது. இதன் ஒருபகுதியாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வேளாண் துறையில் பயன்படுத்தி முன்னேற்றம் கண்டு வருகிறோம். இத்திட்டங்கள் விவசாயிகளுக்கு நிச்சயம் பலனளிக்கும் என்று அமைச்சர் முண்டா கூறினார்.

Kokila

Next Post

நாட்டை உலுக்கும் பயங்கரம்!… பேஸ்புக் நேரலையில் முக்கிய நபர் சுட்டுக்கொலை!

Fri Feb 9 , 2024
மும்பையில் பேஸ்புக் நேரலையில் உத்தவ் அணிசிவசேனா கட்சியைச் சேர்ந்தவரின் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தவ் அணிசிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் வினோத் கோசல்கர். முன்னாள் எம்எல்ஏ. இவரது மகன் அபிஷேக் கோசல்கர். இவர், மும்பையின் தஹிசார் பகுதியில் நேற்று, மொரிஸ் பாய் எனப்படும் மொரிஸ் நோரோன்ஹாவுடன் பேஸ்புக் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்ததும், மொரிஸ் கேமராவை விட்டு நகர்ந்து சென்ற நிலையில், திடீரென அவர் துப்பாக்கியால் அபிஷேக் […]

You May Like