ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் லஷ்மணன் வீர மரணம் அடைந்தார்.
ஜம்மு காஷ்மீர் ராஜோரி அருகே உள்ள ராணுவ முகாமில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், மதுரை புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்தார்.
மேலும் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிசண்டையில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்ந தாக்குதலின் போது சுபேதார் ராஜேந்திர பிரசாத், ரைபிள்மேன் மனோஜ் குமார் மற்றும் ரைபிள்மேன் லக்ஷ்மணன் டி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்திய ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயன்ற இரண்டு தீவிரவாதிகளும் உயிரிழந்தனர்.