fbpx

காட்டுக்கு நடுவே ஒரு நட்சத்திர கோட்டை..!! இது இந்தியாவில் எங்கு இருக்கு தெரியுமா..? சுவாரஸ்ய தகவல்..!!

இந்தியாவின் கடந்த காலத்தைப் பற்றி பேச வேண்டுமென்றால், இந்திய முழுவதும் உள்ள அரண்மனைகள், போர் நினைவுச் சின்னங்கள், கோட்டைகள், கொத்தளங்கள் எல்லாம் இந்தியாவின் கடந்தகால கதைகளை தங்களது பாணியில் சொல்லிக்கொண்டு இருக்கும். அப்படி ஒரு இடத்தைப் பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் அமைந்துள்ள திப்பு சுல்தானின் காலத்தில் கட்டப்பட்ட மஞ்சராபாத் கோட்டை ராணுவ கட்டிடக்கலையின் மிகச்சிறந்த கட்டிடங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. நாட்டில் உள்ள முக்கிய ராணுவ கோட்டைகளில் ஒன்றாக கருதப்படும் இது 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தக் கோட்டையை, பிரெஞ்சு கட்டிடக்கலைஞரான செபாஸ்டின் லு ப்ரெஸ்ட்ரே என்பவர் வடிவமைத்துள்ளார். திப்பு சுல்தானுக்கும் பிரிட்டிஷ் ராணுவத்துக்கும் இடையே நடந்த போரின் விளைவாக இந்தக் கோட்டை உருவாக்கப்பட்டது. போரின் விளைவாக கோட்டை அழிக்கத்தானே படும். எப்படி உருவானது என்று தானே யோசிக்கிறீர்கள்.

இந்தியாவில் வணிகம் செய்த ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆகாது. ஆங்கிலேயரை உள்நாட்டு மன்னர் யாராவது வீழ்த்த முடிவெடுத்தால், சாதாரணமாகவே பிரெஞ்சுகாரர்கள் முன்வந்து அவர்களுக்கு உதவி செய்வர். போதாக்குறைக்கு அப்போது திப்புவுக்கு பிரெஞ்சுக்காரர்கள்  நண்பர்களாக இருந்தனர். அதனால், திப்பு சுல்தானுக்கு உதவிய பிரெஞ்சுக்காரர்களுடனான அவரது நல்லுறவின் காரணமாக, எளிதில் உடைக்க முடியாத ஒரு தனித்துவமான கோட்டையைக் திப்புவுக்கு கட்டிக் கொடுத்துள்ளனர். இந்த கோட்டை 1792 இல் கட்டி முடிக்கப்பட்டது. அப்போதிருந்து, இந்த கோட்டை திடமாக நிற்கிறது.

இது ஒரு நட்சத்திர வடிவ கோட்டையாகும். இந்த கோட்டையின் 8 கடினமான அம்பு போன்ற அமைப்புச் சுவர்களைக் கொண்டுள்ளது. கோட்டையின் நட்சத்திர வடிவ முனை பகுதிகள் காவல் காக்கும் வில்வித்தை வீரர்களுக்கு சாதகமானதாக இருந்துள்ளது. அதோடு மஞ்சராபாத் கோட்டை ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள கோட்டையுடன் நிலத்தடி சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கோட்டையின் அழகை பாதுகாக்கவும், கோட்டையை சுற்றிலும் மரங்கள் மற்றும் தோட்டங்களை நட்டு சரியான சுற்றுலா தலமாக மாற்றவும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோட்டை பெரிதாக சேதம் ஆகாமல் இன்றும் அப்படியே இருக்கிறது. இங்கு போர் பயிற்சிக்கூடம், ஆயுதக்கிடங்கு, வெடிமருந்து சேமிப்பகம் எல்லாம் அப்படியே இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் கோட்டைக்கு நடுவே நான்கு புறமும் இருந்து இறங்கும் ஒரு நீர் தேக்கமும் உள்ளது. இந்த கோடை விடுமுறை சீசனில் இந்த கோட்டைக்கு சென்று வரலாம் அல்லவா? நம் குழந்தைகளுக்கு திப்பு, ஹைதரின் வரலாறுகளை சொல்லிக்கொடுக்கவும் இது ஏதுவாக இருக்கும்.

Chella

Next Post

2 டன் எடை வரை சுமக்கும்..!! தூள் கிளப்பும் புதிய பொலிரோ பிக்அப்..!! அறிமுகம் செய்தது மஹிந்திரா..!!

Fri May 5 , 2023
இந்தியாவின் முன்னோடி வாகனத் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது மஹிந்திரா மோட்டார்ஸ். பயணிகள் வாகனம் மட்டுமின்றி, வணிகப் பயன்பாட்டு வாகனங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், மஹிந்திராவின் பிக்அப் வாகனம் ட்ரக் ரக வாகனங்களில் வெற்றிகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. நகர்ப்புற சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் கொண்டு வரவும், தயாரிப்பு பொருட்களை கொண்டு செல்வதற்கும் இந்த வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய மேம்பட்ட பொலிரோ […]

You May Like