fbpx

காதலனுடன் ஒரே அறையில் படிப்பதற்காக வந்த மாணவி..!! ரத்த வெள்ளத்தில் சரிந்த காதலன்..!! நடந்தது என்ன..?

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே வகோலி என்ற பகுதியில் ராய்சோனி என்ற கல்லூரி உள்ளது. இங்கு லாதூர் பகுதியைச் சேர்ந்த யஷ்வந்த் அசோக் என்ற 22 வயது இளைஞர் படித்து வந்தார். இவருடன் அகமதுநகர் பகுதியைச் சேர்ந்த அனுஜா என்ற 21 வயது பெண்ணும் அதே வகுப்பில் படித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. யஷ்வந்த் தனது நண்பர்கள் 4 பேருடன் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்துள்ளார். தனது காதலன் யஷ்வந்த் வீட்டிற்கு அனுஜா அடிக்கடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு அன்று அனுஜா காதலனுடன் சேர்ந்த படிக்கலாம் என யஷ்வந்த் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் சண்டையாக மாறிய நிலையில், அங்கிருந்த சமையல் அறை கத்தியால் தனது காதலன் யஷ்வந்த்தை அனுஜா குத்தியுள்ளார். பல முறை கத்திக் குத்துக்கு ஆளான யஷ்வந்த் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

இந்த சம்பவத்தில் அனுஜாவின் கைகளிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயங்களுடன் இருந்த அனுஜாவை அக்கம் பக்கத்தினர் பார்த்து, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அப்போது தான் இந்த கோர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தொடர்ந்து யஷ்வந்த்தையைும் மருத்துவமனையில் கொண்டு சேர்த்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. இளம்பெண் அனுஜா மருத்துவமனையில் இருப்பதால், அவரை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.

Chella

Next Post

தமன்னாவுக்கு ஜோடியாகும் குக் வித் கோமாளி பிரபலம்..!! எந்த படத்தில் தெரியுமா..?

Tue May 30 , 2023
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் தற்போது ரஜினியுடன் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல் சுந்தர்.சி-யின் அரண்மனை 4 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் முதன் முதலில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதாக இருந்தார். ஆனால், திடீரென அவர் வெளியேற விஜய் சேதுபதி நடிக்கவிருந்த ஹீரோ ரோலில் சுந்தர்.சி நடித்து வருகிறார். தமன்னா மட்டுமின்றி இப்படத்தில் ராஷி கண்ணாவும் கதாநாயகியாக நடித்து வருகிறார். […]

You May Like