fbpx

வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த மாணவி..!! மருத்துவர் சொன்ன அதிர்ச்சி காரணம்..!! பெரும் சோகம்..!!

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த உருமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீவர்சா (21). பெற்றோருடன் வசித்து வந்த இவர், தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இவர் வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற நிலையில், வகுப்பறையில் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த சக மாணவிகள் பெரும் அதிர்ச்சி அடைந்து, கூச்சலிட்டதால் கல்லூரி நிர்வாகத்தினர் சென்று பார்த்தனர். பின்னர், மாணவியை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி விஷம் குடித்துள்ளதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர், சக மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். அப்போது, மாணவி ஸ்ரீவர்சாவுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வந்ததாகவும், அதில் விருப்பம் இல்லாத நிலையில், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர். எனினும், இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Chella

Next Post

வெந்நீர் நீரூற்று..!! ஆசையாக குளித்த பெண்களை ஆபாச படம் எடுத்த கும்பல்..!! 10,000 வீடியோக்கள்..!! அதிரவைக்கும் சம்பவம்..!!

Thu Feb 16 , 2023
ஜப்பானின் முக்கிய நகரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக வெப்ப நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், குளிக்க வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் ஆர்வமாக இருக்கும். அந்நாட்டினரும் இதனை பெரிதும் விரும்புவர். அந்தவகையில், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் வெப்ப நீருற்றிற்கு சென்று ஜாலியாக இருந்து வருவர். இந்நிலையில், அந்த ஊற்றுகளில் குளிக்கும் பெண்களை ரகசிய வீடியோ எடுத்து ஒரு கும்பல் பணம் சம்பாதித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது, குளிக்கும் […]
வெந்நீர் நீரூற்று..!! ஆசையாக குளித்த பெண்களை ஆபாச படம் எடுத்த கும்பல்..!! 10,000 வீடியோக்கள்..!! அதிரவைக்கும் சம்பவம்..!!

You May Like