fbpx

முன்னாள் காதலியை கொன்று கல்லூரி வளாகத்திலேயே புதைத்த மாணவன்..!! சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..!!

முன்னாள் காதலியை கொலை செய்து கல்லூரி வளாகத்திலேயே புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம் வதஸ்மா என்ற பகுதியில் ஒரு மருந்தகக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படித்து வரும் ஒரு மாணவியை நபர் ஒருவர், கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை கல்லூரி வளாகத்தில் மறைத்து வைத்துள்ளார். பின்னர், அங்கிருந்து அவர் தப்பி உள்ளார். இதையடுத்து, கல்லூரி காவலாளி சம்பவத்தன்று இரவு ரோந்து பணியில் இருந்தபோது பெண்ணின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கல்லூரியில் உள்ள சிசிடிவி மேராக்களை ஆய்வு செய்தனர். அதில் மாணவியை கொலை செய்த நபரை அடையாளம் கண்டனர். பின்னர், தலைமறைவாக இருந்த அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதன்படி, அந்த மாணவியும், இளைஞரும் ஒரே கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துள்ளனர். பின்னர், அந்த மாணவி மற்றொரு ஆண் நண்பருடன் பேசி வந்துள்ளார். இதனை அறிந்த அந்த இளைஞர் அத்திரமடைந்தார். கடந்த 28ஆம் தேதி புத்தகம் கொடுப்பதாக கூறி முன்னாள் காதலியை கல்லூரி வளாகத்தின் பின்பக்கத்திற்கு வரச் சொல்லி அழைத்துள்ளார். அப்போது அங்கு வந்த மாணவிக்கும் அந்த இளைஞருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் மாணவியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து முன்னாள் காதலியை கொலை செய்த மாணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

செர்பியாவில் நடந்த பயங்கர சம்பவம்...! துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழப்பு.. 13 பேர் படுகாயம்...!

Fri May 5 , 2023
செர்பியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். செர்பியா நாட்டின் பெல்கிரேடுக்கு அருகில் உள்ள நகரத்திற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இரண்டாவது முறையாகும். இன்று, தலைநகரில் இருந்து 50 கிலோமீட்டர் தெற்கே உள்ள Mladenovac நகருக்கு அருகில் உள்ள மக்கள் மீது […]

You May Like