திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி, அதே பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதி பள்ளியில் 17 வயதான மாணவர் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். உறவினர்களான இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் மிக நெருக்கமாகியுள்ளது. இந்நிலையில், மாணவியின் உடலில் திடீரென பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால், சந்தேகம் அடைந்த பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். மகள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்த நிலையில், இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தனர்.
இதனையடுத்து, வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் மாணவியை கர்ப்பமாக்கிய 12ஆம் வகுப்பு மாணவன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.