fbpx

சீருடையில் மலம் கழித்த 8 வயது சிறுவன் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய ஆசிரியர்.. அதிர்ச்சி சம்பவம்..

கர்நாடகாவில் சீருடையில் மலம் கழித்த 8 வயது சிறுவன் மீது ஆசிரியர் ஒருவர் கொதிக்கும் நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

கர்நாடகா மாநிலம் ராய்ச்சுரு மாவட்டத்தில் உள்ள மஸ்கியில் உள்ள ஸ்ரீ கணமதேஸ்வரா தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் சிறுவன், பள்ளி சீருடையில் மலம் கழித்துள்ளார். குழந்தையை தண்டிக்க ஆசிரியர் ஹுலிகெப்பா கொதிக்கும் நீரை ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவன் 40% காயம் அடைந்து லிங்கசகுரு தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தையடுத்து, ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. ஆனால், சிறுவனின் பெற்றோரை அதிகாரத்தில் உள்ள சிலர் வெளிப்படையாக மிரட்டியதாக தெரிகிறது.. ஆனால் அவர்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை.

குழந்தைகள் நலக் குழுவோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோ பாதிக்கப்பட்ட சிறுவனை பார்க்கவே இல்லை என்று கூறப்படுகிறது.. சிறுவனின் அவல நிலையைப் பார்த்துக் கண்டுகொள்ளாமல் இருக்காமல் போலீஸார் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்..

Maha

Next Post

மக்களே ஜாக்கிரதை.. இந்த ஆபத்தான WhatsApp செய்திகளை நம்பாதீங்க.. உங்கள் பணம் திருடப்படலாம்..

Sat Sep 10 , 2022
UPI முறை மூலம், பணத்தை அனுப்புவதும் பெறுவதும் முன்னெப்போதையும் விட எளிதாகிவிட்டது. நாடு முழுவதும் உள்ள மக்கள் UPI ஐப் பயன்படுத்தி பணத்தை அனுப்புகிறார்கள் மற்றும் பெறுகிறார்கள், மேலும் UPI இல் நடக்கும் பரிவர்த்தனைகளின் அளவைக் கருத்தில் கொண்டு, சைபர் குற்றவாளிகள் புதுப்புது மோசடி உத்திகளை கையாண்டு வருகின்றனர்.. அந்த வகையில் சமீபகாலமாக, மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி அதன் மூலம் பணத்தை திருடி வருகின்றனர்.. குறிப்பாக வேலை […]

You May Like