fbpx

”காலத்தால் அழியா கலைஞன்”..!! நடிகர் ரகுவரனின் நினைவு தினம் இன்று..!!

தரமணியின் முக்கிய அடையாளம் திரைப்படக் கல்லூரி. அந்தத் திரைப்படக் கல்லூரி நிறைய திரை ஜாம்பவன்களை இன்று வரையில் தமிழ் சினிமாவுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. திரைப்படக் கல்லூரியில் இருந்து வந்த மிக முக்கியமான வரவாக இன்றளவிலும் ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் நடிகர் ரகுவரன்.

இவர், கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். 1980-2009 வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாக இவர் அறிமுகமானாலும், தனது வித்தியாசமான குரல் மாடுலேஷன், ஸ்டைல், லுக் போன்றவற்றின் மூலம் வில்லன் நடிகராக பெயர் பெற்றார். பொதுவாக திரையில் அவரது வசனங்களை விட உடல் அசைவுகளாலே கதையை கடத்திவிடும். நடை, உடை, பாவனை, பேச்சு என ரகுவரனின் ஒவ்வொரு விஷயமும் தனித்துவமானது. அவரின் குரலைப் பேசாத மிமிக்கிரி ஆர்டிஸ்டுகளே இல்லை. வில்லனாக இருக்கும் ஒருவரை சப்போர்டிங்காகவும், குணச்சித்திர வேடத்தில் நடிக்கும் ஒருவரை வில்லனாகவும் அவ்வளவு எளிதில் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

”காலத்தால் அழியா கலைஞன்”..!! நடிகர் ரகுவரனின் நினைவு தினம் இன்று..!!

தமிழ் திரையுலகம் மறக்கவே முடியாத சில கதாப்பாத்திரங்களுள் ‘ஆண்டனி’யும் ஒன்றாகிப் போனது. இன்று வில்லனாக நடிக்க ஆசைப்படும் பலரும் ரகுவரனையும், ஆண்டனியையும் தான் இன்ஸிபிரேஷனாக எடுத்துக் கொள்கின்றனர். ஆண்டனி… மார்க் ஆண்டனி என்று ரகுவரன் தன்னுடைய பெயரை சொல்லும் ஸ்டைலே தனி. ‘இப்படி ஒரு அப்பா இருந்தா எப்படி இருக்கும்’ என்று ஏங்கும் அளவுக்கு, ‘லவ் டுடே’ படத்தில் அப்பாவாக நடித்திருப்பார். ‘நேருக்கு நேர், நிலாவே வா, அமர்க்களம்’ என தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்தவர், ‘அரங்கநாதனாக’ முதல்வனில் மிரட்டினார். எப்படி யோசித்துப் பார்த்தாலும் அந்த கதாப்பாத்திரத்தை வேறு எவராலும் அவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது என்று தான் தோன்றுகிறது. அதற்காக தமிழக அரசின் ‘சிறந்த வில்லனுக்காக’ விருதையும் பெற்றார்.

”காலத்தால் அழியா கலைஞன்”..!! நடிகர் ரகுவரனின் நினைவு தினம் இன்று..!!

நடிப்பு மட்டுமின்றி பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் என பல திறமைகளை உள்ளடக்கிய பன்முக கலைஞர் ரோகிணியைக் காதலித்து 1996ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ரகுவரன். இவர்களுக்கு ரிஷி என்ற மகன் உள்ளார். பின்னர் ரகுவரனும், ரோகிணியும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இருப்பினும், ரோகிணி தொடர்ச்சியாக ரகுவரனுடனான தனது ஆத்மார்த்தமான காதலையும் நினைவுகளையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். ரகுவரைவனை சிறந்த நடிகராக மக்கள் பார்த்திருந்த நிலையில், அவரது இசை ஆர்வம் அவர் உயிரோடு இருந்த வரை பெரும்பாலும் யாருக்கும் தெரியாமல் இருந்தது. ரகுவரனின் மறைவுக்கு பிறகு அவரது பாடல் மற்றும் இசை ஆர்வத்தை உலகிற்கு வெளிப்படுத்தினார் ரோகிணி. ரகுவரனின் இசை ஆல்பத்தை ரோகிணி மற்றும் அவரது மகன் சாய் ரிஷிவரன் முன்னிலையில் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

‘ரகுவரன் – ஒரு இசைப் பயணம்’ எனப் பெயரிடப்பட் அந்த இசை ஆல்பம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. அந்த வகையில், ரகுவரனின் நினைவு நாளான இன்று ரோகிணி அவர் தனது ட்விட்டர் பதிவில், “மார்ச் 19, 2008 ஒரு சாதாரண நாளாகத் தொடங்கியது. ஆனால், எனக்கும் ரிஷிக்கும் எல்லாவற்றையும் மாற்றியது. ரகு சினிமாவின் இந்தக் கட்டத்தை மிகவும் நேசித்திருப்பார். ஒரு நடிகராகவும் அவர் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே தனது நேர்காணல் ஒன்றில் ஒருமுறை நானும் ரகுவும் ரிஷியை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றோம். அப்போது ரிஷி திருக்குறள் சொல்வதை பார்த்த ரகு இவ்வளவு அழகாக திருக்குறள் சொல்றானே மா என்றார். நான் தான் அவனுக்கு சொல்லிக்கொடுத்தேன் என்றேன்.

திருக்குறள் இவ்வளவு அழகாக சொல்கிறான் என்ன அன்று சொல்லிய அந்த ரகு இப்போது இருந்து இருந்தால் ரிஷியை பார்த்து எப்படி ரசித்து இருப்பார் எப்படி பெருமைப்பட்டு இருப்பார் என்பதை நினைக்கும் போது அது மிகவும் வலி தர கூடிய விஷயமாக இருக்கிறது” என ரோகிணி தெரிவித்திருந்தார். நானும், அவரது நண்பர்களும் அவரிடம் அவரது நடிப்புத்திறனைப் பற்றி சிலாகித்துப் பேசுவோம் தான், ஆனால் அவருக்கு அது போதவில்லை. அவரது மரணத்திற்குப் பிறகு ரசிகர்கள் திரையில் ரகுவரனைக் கண்டதுமே ஆர்பரித்துக் கொண்டாடுவதைக் காணும் போது, இதெல்லாம் தெரியாமலே அவர் இறந்து விட்டாரே தோன்றும் என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதேசமயம் ரகுவரன் மறைந்த நாளில் செய்தியாளர்கள் தன் குடும்பத்திற்கான தனிமையை தர மறுத்தனர் என்று அவர் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

மீண்டும் ஒரு ஆண்டனியோ, அரங்கநாதனோ, சிதம்பரமோ, சந்திர சேகரோ, துளசி தாஸோ நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு கிடைக்க மாட்டார்கள். ஏனென்றால் அந்தக் கதாப்பாத்திரங்களில் ரகுவரன் நடிக்கவில்லை.. திரைப்படங்களில் இன்றும் நம்முடம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்..!

Chella

Next Post

புலி வாலை பிடித்து போஸ் கொடுத்த செல்லூர் ராஜூ..!! இணையத்தில் படு வைரல்..!! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!!

Sun Mar 19 , 2023
அதிமுக முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜூ, புலி வாலை பிடித்தபடி போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்லூர் ராஜூ. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர். இவர் 2011இல் மதுரை மேற்கு தொகுதியில் இருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தார். தொடர்ந்து 2016இல் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் கூட்டுறவுத்துறை […]
புலி வாலை பிடித்து போஸ் கொடுத்த செல்லூர் ராஜூ..!! இணையத்தில் படு வைரல்..!! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!!

You May Like