fbpx

முன்னோர்களால் 65 ஆண்டுகளாக தீபாவளியை கொண்டாடாத கிராமம்..!! இந்த காரணம் புதுசா இருக்கே..!!

நாடு முழுவதும் நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், நகரங்கள், கிராமங்கள் உட்பட அனைத்து தரப்பிலும் மக்கள் கொண்டாட்டத்தை தொடங்கியிருக்கின்றன. ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 13 கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதே கிடையாது. அதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் வசிக்கும் மக்கள், கடந்த 65 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் தவித்து வருகின்றனர். இதற்கு தங்களது முன்னோர்கள் தீபாவளியை கொண்டாட கடன் வாங்கி, அந்த கடனை அடைக்க முடியாமல் தவித்ததே காரணம் என்கிறார்கள்.

அந்தக் கடனை அடைக்க முடியாமல் பெரியவர்கள் பட்ட அவதியை கண்ட அடுத்த தலைமுறை மக்கள், 1958ஆம் ஆண்டில், ”இனி தீபாவளியை கொண்டாடவே கூடாது” என்று தீர்மானம் போட்டு அன்று தொடங்கி இன்று வரை தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் இந்த கிராமங்களில் கடைபிடித்து வருகின்றனர். மொத்தம் 13 கிராமத்தில் வசிக்கும் மக்கள் இந்த முடிவெடுத்து செயல்படுத்தி வருகின்றனர்.

வெளியூரில் வசிக்கும் இந்த ஊரைச் சேர்ந்தவர்களும் கூட தீபாவளியை கொண்டாடுவது இல்லையாம். இது மூன்றாவது தலைமுறையாக தொடர்கிறது. தீபாவளிக்கு பதில் இவர்கள் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். தீபாவளியை கொண்டாடாமல் தவிர்க்கும் மாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராம மக்களின் காரணம் விசித்திரமானதாக இருந்தாலும், நியாயமானதாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

Chella

Next Post

போன் எடுக்காதது ஒரு குத்தமா?… அதுக்குனு இப்படியா!… 150 முறை!... மனைவியை கொலை செய்த கொடூர போலீஸ்!

Sat Nov 11 , 2023
கர்நாடகாவில் போன் எடுக்காத ஆத்திரத்தில் மனைவியை போலீஸ் கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த ஹோசக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பிரதீபாவுக்கும், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் என்பருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. சாம்ராஜ்நகர் காவல் நிலையத்தில் கிஷோர் காவலராக பணியாற்றி வந்துள்ளார். பிரதீபாவுக்கு நண்பர்கள் வட்டாரம் பெரிது என்று கூறப்படுகிறது. இதனால், திருமணத்திற்கு பிறகு தினமும் […]

You May Like