fbpx

பெற்றோரை கவனிக்க சென்ற இளம்பெண்..!! பெட்ரூமுக்குள் அழைத்துச் சென்ற வீட்டு உரிமையாளர்..!! பகீர் சம்பவம்

வயதான பெற்றோரை கவனிக்க சென்ற இளம்பெண்ணை, வீட்டின் உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கூட்லு பகுதியைச் சேர்ந்தவர் பரசிவமூர்த்தி (45). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் வசித்து வரும் தனது வயதான தாய், தந்தையை கவனித்து கொள்ள வில்சன் கார்டனில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்திடம் வேலைக்கு ஆள் கிடைக்குமா? என்று கேட்டுள்ளார். அந்நிறுவனம் 21 வயது இளம்பெண் ஒருவரை வேலைக்கு அனுப்பியுள்ளது. அந்த இளம் பெண்ணும் வயதானவர்களை நல்ல முறையில் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், ஒரு நாள் தனிமையில் இருந்த அந்த இளம்பெண்ணை பரசிவமூர்த்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இதை வெளியில் யாரிடமும் கூற கூடாது என மிரட்டியுள்ளார்.

பெற்றோரை கவனிக்க சென்ற இளம்பெண்..!! பெட்ரூமுக்குள் அழைத்துச் சென்ற வீட்டு உரிமையாளர்..!! பகீர் சம்பவம்

இதனால், சில காலம் அமைதியாக இருந்த இளம்பெண் இச்சம்பவம் குறித்து தன்னை வேலைக்கு அனுப்பிய நிறுவனத்தினரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை சொல்லி அழுது இருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நிறுவனத்தினர் உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து, போலீசார் பரசிவமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

சீனாவில் எலுமிச்சை பழத்திற்கு தட்டுப்பாடு!... இரு மடங்கு அதிகரித்த விலை...ஏன் தெரியுமா?

Wed Dec 21 , 2022
சீனாவில் கோவிட் தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், சீன மக்கள் இந்த நோயை எதிர்த்துப் போராட உள்ளூர் வைத்திய முறைகளை கையாள தொடங்கியுள்ளனர். இதனால் எலுமிச்சை பழத்தின் தேவை அங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் முன்னெப்போதும் இல்லாத மரபணு மாற்றத்தை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கூடுதல் வீரியமாகவும் இந்த வைரஸ் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வகை வைரஸ் தாக்கி சீனாவில் நூற்றுக்கணக்கானோர் இறந்து […]

You May Like