டி.என்.பாளையம் அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டாா். ஈரோடு டி.என்.பாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூர் பகுதியில் வசித்து வருபவர் கருப்பன். இவருடைய மகன் இளங்கோவன் (22). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை இளங்கோவன் காதலித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை பேசி சிறுமியை கடத்தி சென்று இளங்கோவன் திருமணம் செய்துள்ளார்.
இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார். இதுபற்றி சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில், பங்களாப்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின்னர் இளங்கோவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.