fbpx

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞர்; போக்சோவில் கைது… டி.என். பாளையத்தில் பரபரப்பு..!!

டி.என்.பாளையம் அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டாா். ஈரோடு டி.என்.பாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூர் பகுதியில் வசித்து வருபவர் கருப்பன். இவருடைய மகன் இளங்கோவன் (22). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை இளங்கோவன் காதலித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை பேசி சிறுமியை கடத்தி சென்று இளங்கோவன் திருமணம் செய்துள்ளார்.

இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார். இதுபற்றி சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில், பங்களாப்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின்னர் இளங்கோவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Baskar

Next Post

"பசங்க எல்லாம் சாப்பிட்டாங்களா"?... என காலை சிற்றுண்டி திட்டம் பற்றி கேட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!!

Fri Sep 23 , 2022
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தினமும் பல விதமான டிஃபன் வகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி திங்கட்கிழமை உப்புமா வகை, செவ்வாய்க்கிழமை கிச்சடி, புதன் கிழமை பொங்கல், வியாழக்கிழமை உப்புமா வகை, வெள்ளிக்கிழமை […]

You May Like