fbpx

ஜோதிடத்தை நம்பி காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற இளம்பெண்..!! ஞாபகம் இருக்கா..!! இப்போ என்ன ஆச்சு தெரியுமா..?

கன்னியாகுமரியை ஒட்டிய கேரளப் பகுதியில் அமைந்துள்ள பாறசாலையைச் சேர்ந்த இளைஞரான ஷரோன் ராஜ், கிரீஷ்மா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இதற்கிடையே, ஷாரோன் ராஜ் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பான புகாரில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், கிரீஷ்மாவே திட்டமிட்டு தனது காதலன் ஷரோன் ராஜா கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் வீட்டில் பார்த்த இளைஞரை திருமணம் செய்து கொள்ளவும், முதல் கணவர் இறந்து விடுவார் என ஜோதிடர் கூறியதாலும் பழரசத்தில் நஞ்சு கலந்து கொடுத்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து கிரீஷ்மா, அவரது தாய், மாமா ஆகியோரை கேரள போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கிரீஷ்மாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

Chella

Next Post

பாஜகவின் உறவை முறித்த அதிமுக..!! தமிழ்நாட்டில் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு..!!

Tue Sep 26 , 2023
அதிமுக-பாஜக கூட்டணி முறிந்த மறுநாளே சென்னை, மதுரை, தஞ்சை ஆகிய இடங்களில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டை முழுமையாக குறி வைத்துள்ள மத்திய அமலாக்கத்துறை, பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலில் தலையிட்ட அமலாக்கத்துறை, அவர் தொடர்பாக பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து சோதனைகளை நடத்தி ஆவணங்கள் பறிமுதல் செய்து வருகிறது. அரசியல் ரீதியாக […]

You May Like