fbpx

மாணவர்களின் டிகிரி சான்றிதழில் ஆதார் எண்ணை அச்சிடக்கூடாது!… ஏஐசிடிஇ உத்தரவு!

டிகிரி சான்றிதழில் ஆதார் எண்ணை அச்சிடக் கூடாது என்று கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் (ஏஐசிடிஇ) அனுமதி பெற்ற நிறுவனங்களின் முதல்வர்களுக்கும் இயக்குநர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் மாநில அரசுகள் சில, மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களிலும் டிகிரி சான்றிதழ்களிலும் முழுமையான ஆதார் எண்ணை அச்சிடத் திட்டமிட்டு உள்ளதாக சில ஊடக நிறுவனங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. மாணவர் சேர்க்கையின்போதோ அல்லது வேலை வாய்ப்பின்போதோ சரிபார்ப்பிற்காக இந்த ஆவணம் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது UIDAI ஆதார் நிறுவனத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து UIDAI நிறுவனம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்குத் தெரிவித்தது. இந்த நிலையில் ஆதார் (தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல்) ஒழுங்குமுறைச் சட்டம் 2016-ன் படி, இது தவறு என்று தெரிவிக்கப்படுகிறது. பொது வெளியில் எந்த ஒரு தகவல் தளத்திலும் ஆதார் எண்ணைப் பகிர்வதோ, பதிவு செய்வதோ தவறாகும். தேவைப்பட்டால், சில எண்களை மட்டும் குறிப்பிட்டு, மீத எண்களை அடித்துவிட்டு ஆதார் எண்ணைக் குறிப்பிடலாம்.
இதன்படி, ஆதார் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, தற்காலிகச் சான்றிதழ்கள் மற்றும் டிகிரி சான்றிதழ்களில் ஆதார் எண்ணை அச்சிட அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Kokila

Next Post

35 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிப்பு!… இவர்களுக்கெல்லாம் ரூ.1000 கிடையாது!… புதிய தகவல்!

Tue Sep 5 , 2023
தமிழக அரசின் ரூ.1000 உரிமைத் தொகை பெற விண்ணப்பித்தவர்களில் 35 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது இதற்கான விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் உரிமை தொகைக்கு விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை சரிபார்க்க கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். […]

You May Like