fbpx

சனாதன ஒழிப்பு..!! அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபுவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!!

சனாதனம் பேச்சு தொடர்பான வழக்கில் பதிலளிக்க தமிழ்நாடு அரசு, திராவிடர் கழகம், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பங்கேற்றது அரசியலமைப்பு சாசனத்திற்கு முரணானது என அறிவிக்கக் கோரியும், மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த விவகாரத்தில் ஏன் உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அனுமதி தேவை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிடவே விரும்பவில்லை என நீதிபதிகள் கூறினர். அமைச்சர் ஒருவர் வெறுப்பு பேச்சை ஊக்குவிக்கிறார். அவர் அரசின் பிரதிநிதி தனி நபர் அல்ல, அமைச்சராக இருந்து கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதனையடுத்து தமிழ்நாடு அரசு, திராவிடர் கழகம், அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Chella

Next Post

உஷார்..!! மருந்துக்கு பதில் காற்றை செலுத்திய செவிலியர்..!! கதறி அழுத குழந்தை..!! பெற்றோர் அதிர்ச்சி..!! நடந்தது என்ன..?

Fri Sep 22 , 2023
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பெரிநாட்டில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஸ்ரீலட்சுமி என்பவர் பிறந்து 75 நாட்களே ஆன தனது மகள் ஸ்ரீனிகாவுக்கு தடுப்பூசி போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது, செவிலியர் ஷீபா குழந்தைக்கு ஊசி போட்டுள்ளார். குழந்தைக்கு போடப்பட்ட ஊசி சிரிஞ்சில் மருந்து எதுவும் இல்லாமல் காலியாக இருந்ததைக் கவனித்த குழந்தையின் தாய், அது குறித்து ஷீபாவிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்குள் குழந்தைக்கு செவிலியர் காலி சிரஞ்ச் […]

You May Like