fbpx

வேகமெடுக்கும் கொரோனா பரவல்..!! மக்களே அசால்ட்டா இருக்காதீங்க..!! அப்பறம் ரொம்ப கஷ்டப்படுவீங்க..!!

சீனாவில் 2019ஆம் ஆண்டு தோன்றி 2 ஆண்டுகளுக்கு உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்று வைரஸ், அவ்வப்போது வெவ்வேறு வடிவங்களில் உருமாற்றம் அடைந்து அச்சம் காட்டி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டும் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் தலைத்தூக்க தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி நாட்டில் புதிதாக 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,997 ஆக உயர்ந்துள்ளது. இதில் 80% பாதிப்பு கேரளாவில் பதிவாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கேரளாவில் 265 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,606 ஆக உயர்ந்துள்ளது. திருவனந்தபுரத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிந்துள்ளார். டெல்லி அடுத்த நொய்டாவில் பல மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள, மக்கள் அடர்த்தி மிகுந்த நொய்டாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் சுகாதார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Chella

Next Post

நெல்லை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை அறிவிப்பு..!! யார் யாருக்கு எவ்வளவு..?

Fri Dec 22 , 2023
தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் கடுமையாக சிரமத்தை சந்தித்துள்ளனர். பெரும்பாலானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நிவாரணம் குறித்த விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய், சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 10,000 ரூபாய், 33 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஹேக்டருக்கு […]

You May Like