கும்பகோணத்தில் 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது மழை காலம் நெருங்கி வருவதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழந்த நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் கும்பகோணத்தில் 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு பொது மருத்துவமணையில் 26 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் டெங்கு சிகிச்சைக்கு பலர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பெண்கள் மற்றும் 2 ஆண்களுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்புக்கு என தனி வார்டு இல்லாததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு தனி வார்டு அமைக்குமாறு கோரிக்கையம் எழுந்துள்ளது.
திருவண்ணாமலையில் இதுவரை 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.