fbpx

Shoking: தொழிற்சாலையில் திடீர் விபத்து… 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…!

ஹரியானாவில் தொழிற்சாலையில் திடீர் விபத்து… 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள தொழிற்பேட்டையில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையின் கொதிகலனில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 100-க்கும் மேற்பட்டோர் பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், ஏராளமான தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த அனைவரும் ரேவாரியில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் மற்றும் சிலர் டெல்லி மற்றும் குருகிராமில் உள்ள மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். நேற்று மாலை 5.50 மணியளவில் தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்ததில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ரேவாரி மாவட்டத்தின் அரசு மருத்துவமனை முதல்வர் சுரேந்திர யாதவ் கூறுகையில், பல தொழிலாளர்கள் தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இதுபோன்ற ஒரு பெரிய விபத்து காரணமாக, ஹரியானாவில் உள்ள மற்ற மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ரேவாரி சிவில் மருத்துவமனையில் குறைந்தது 23 ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Vignesh

Next Post

TN Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம்?... மீண்டும் அமைச்சராக பதவியேற்கும் பொன்முடி!

Sun Mar 17 , 2024
TN Cabinet: திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை என்றும் பொன்முடி எம்.எல்.ஏ.வாக தொடர்கிறார் என்றும் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, மீண்டும் அவர் அமைச்சராக பதவியேற்பது உறுதியாகியுள்ளதால் தமிழக அமைச்சரவையில் இலாக்கா மாற்றப்படவுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பொன்முடி, இதை எதிர்த்து மேல்முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் சென்றார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து மக்கள் […]

You May Like