fbpx

அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! அதுவும் இந்த மாவட்டங்களில்..

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் மாறுபாடு காரணமாகவும், தமிழ்நாட்டின் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நீலகிரி, கோவை, நாமக்கல் மாவட்டங்களில் மழை பதிவானது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது கனமழையும் கொட்டித் தீர்த்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,   சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமாலை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Read more | உத்தரப்பிரதேச ஆன்மிக நிகழ்வு..! பலி எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு!!

English Summary

According to the Met Office, there is a possibility of moderate rain in 6 districts in Tamil Nadu in the next 3 hours.

Next Post

விஜய்யுடன் கோர்த்துவிட்ட சுசித்ரா!. தக்க பதிலடி கொடுத்த திரிஷா!.

Thu Jul 4 , 2024
Suchitra broke up with Vijay! Trisha gave a fitting reply!

You May Like