fbpx

தமிழ்நாட்டில் ஸ்மோக் பிஸ்கட்டுக்கு அதிரடி தடை..!! தயாரிப்பு பணி தீவிரம்..!!

இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறுகையில், ”இது போன்று விற்கும் ஸ்மோக் பிஸ்கெட் என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள். அதில் ஊற்றப்படுவது லிக்விட் நைட்ரஜன், ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து. தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை முதல்வர் ஸ்டாலினுக்கும் டேக் செய்துள்ளார். அந்த வீடியோவில், திரவ நைட்ரஜனை பிஸ்கட்டில் வைக்கிறார்கள். அதிலிருந்து புகை வருகிறது. அந்த புகையுடன் அப்படியே பிஸ்கெட்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். அதை சாப்பிட்டதும் நம் வாய், மூக்கில் இருந்து புகை வரும். ஒரு சிறுவன் ஆசையாக திரவ நைட்ரஜனை உண்கிறார். சிறிது நேரத்தில் வயிறு வலியால் துடிக்கிறார். இதற்காகத்தான் அந்த பிஸ்கெட்டை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

ஆனால், இந்த வீடியோ தமிழகத்தில் எடுக்கப்பட்டது அல்ல என பலர் கூறி வருகிறார்கள். இது கர்நாடகா மாநிலத்தில் தாவணகெரேவில் நடந்த விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்கிறார்கள். அதாவது அந்த உண்மைதானா என நெட்சடிகள் கேள்வி எழுப்ப அதற்கு ஆம் உண்மைதான்! சென்னை தீவு திடலில் இந்த வருடம் நடந்த அரசு பொருட்காட்சியில் இரண்டு கடைகள் இதற்காக ஒதுக்கப்பட்டன.. பல கடற்கரைகளில் விற்பனை செய்கிறார்கள்.. திருமண விழாக்களில் தருகின்றனர். என மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

இந்த ஸ்மோக் பிஸ்கெட்டுகள் பொதுவாக அரசு, தன்னார்வலர்கள் நடத்தும் பொருட்காட்சிகளில் பெரிய அப்பளம், மிளகாய் பஜ்ஜி உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில்தான் ஸ்மோக் பிஸ்கெட் விற்பனையும் உள்ளது. அதாவது ஒரு சிலிண்டரில் இருந்து திரவ நைட்ரஜனை எடுக்கிறார்கள். அதை பிஸ்கெட்டில் சேர்க்கிறார்கள். பிஸ்கெட்டில் இருந்து புகை வருகிறது. அந்த புகையுடன் பிஸ்கெட்டை அப்படியே வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். அப்போது நமக்கும் புகை வரும். இது ஜாலிக்காக பலர் வாங்கி சாப்பிடுகிறார்கள். இதுதான் ஆபத்தை விளைவிக்கும் என்கிறார் மோகன் ஜி.

Read More : ஏசி போட்டு தூங்கினால் இந்த பிரச்சனையை சந்திப்பீர்கள்..!! எச்சரிக்கையா இருங்க..!!

Chella

Next Post

"AI மூலம் யுபிஎஸ்சி கேள்வித் தாள்" - உயர் நீதிமன்றம் ஆலோசனை!

Tue Apr 23 , 2024
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளின் கேள்வித்தாள்களை AI பயன்படுத்தி, மாநில மொழிகளில் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கலாம் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மாநில மொழியில் எழுத உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை, மாநில மொழிகளில் […]

You May Like