அனைத்து மருந்துக் கடைகளிலும் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்த வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் M.S. சங்கீதா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் உள்ள அனைத்து கடைகளிலும் அடுத்த 30 நாட்களுக்குள் கேமராக்கள் பொருத்தியிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மருந்துக் கடைகளில், சிசிடிவி பொருத்தாவிட்டால் கடை உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். மெடிக்கல் ஷாப்களில் போதை மாத்திரைகள் சட்டத்திற்கு புறம்பாக விற்கப்படுகிறது என்ற புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.