fbpx

பால் விற்பனை அதிரடி நிறுத்தம்..!! ஆவின் நிர்வாகம் முடிவு..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!

தமிழ்நாடு முழுவதும் ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தி விற்பனை செய்து வருகிறது. சமீபகாலமாக பச்சை நிற பால்பாக்கெட்டை நிறுத்திவிட்டது. புதிய பாலை அறிமுகம் செய்து மறைமுகமாக விலை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து ஆவின் நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பால் விற்பனை நாள் ஒன்றுக்கு சுமார் 14.50 லட்சம் லிட்டரும் மற்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பால் உபபொருட்களை சுமார் 1,000-க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு எவ்வித தங்கு தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், பொதுமக்களுக்கு ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் அனைத்து இடங்களிலும் எளிதில் கிடைக்கும். அந்த வகையில், ஆவின் நிர்வாகம் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் சுற்றுலா தலங்களிலும் ஆவின் விற்பனை நிலையங்களை அமைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் நிர்வாகம் அனைத்து காலகட்டங்களிலும் பொதுமக்கள் நலன் மற்றும் அவர்களின் விருப்பத்தை அறிந்து செயல்பட்டு வருகிறது. எனவே, மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எவ்வித தங்கு தடையுமின்றி விநியோகம் செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

RIP | சங்கர் நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் காலமானார்..!! பிரபலங்கள் இரங்கல்..!!

Tue Nov 21 , 2023
பிரபல கண் மருத்துவமனையான சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சென்னை சங்கர நேத்ராலயாவின் இந்திய நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.எஸ்.பத்ரிநாத். இவர் கடந்த 1996இல் பத்மபூஷன் பெற்றார். மேலும், பத்மஸ்ரீ மற்றும் டாக்டர் பிசி ராய் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். […]

You May Like