நாட்டில் புதிதாக 403 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4972 ஆக குறைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, நாட்டில் இதுவரையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,864 என அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய் தொற்றுக்கு 5 பேர் பலியாகி இருக்கின்றனர். அவர்களில் 3 பேர் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள்.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4.49 கோடியாக இருக்கிறது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவீதம் 0.01 சதவீதமாக இருக்கிறது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் சதவீதம் 98.80 சதவீதமாக இருக்கிறது. இதுவரையில் 220.66 கோடி நோய் தொற்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.