மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ராஜ்யசபா எம்பி மிலிந்த் தியோரா மற்றும் சிவசேனா மூத்த தலைவர் நீலம் கோர்ஹே ஆகியோர் முன்னிலையில் நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இணைந்தார்.
கட்சியில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கோவிந்தா, 1980-களில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினேன், 2004 முதல் 2009 வரை அரசியலில் முதல்முறையாகப் பணியாற்றிய பிறகு, மீண்டும் அதே துறைக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தால் கலை மற்றும் கலாச்சாரத் துறையில் பணியாற்றுவேன். ஷிண்டே முதல்வராக பதவியேற்ற பிறகு மும்பை மிகவும் அழகாகவும், வளர்ச்சியுடனும் காட்சியளிக்கிறது என்றார்.
60 வயதான நடிகர் கோவிந்தா, ‘கூலி நம்பர் 1’, ‘ஆன்ட்டி நம்பர் 1’, ‘ஷோலா அவுர் ஷப்மான்’, ‘ஹம்’, ‘ஸ்வர்க்’, ‘தீவானா மஸ்தானா’, ‘பாகம் பாக்’, ‘ போன்ற பிரபலமான படங்களில் நடித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முடிவெடுப்பார் என்றார்.