fbpx

பிரபல இந்தி நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இணைந்தார்…!

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ராஜ்யசபா எம்பி மிலிந்த் தியோரா மற்றும் சிவசேனா மூத்த தலைவர் நீலம் கோர்ஹே ஆகியோர் முன்னிலையில் நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இணைந்தார்.

கட்சியில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கோவிந்தா, 1980-களில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினேன், 2004 முதல் 2009 வரை அரசியலில் முதல்முறையாகப் பணியாற்றிய பிறகு, மீண்டும் அதே துறைக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தால் கலை மற்றும் கலாச்சாரத் துறையில் பணியாற்றுவேன். ஷிண்டே முதல்வராக பதவியேற்ற பிறகு மும்பை மிகவும் அழகாகவும், வளர்ச்சியுடனும் காட்சியளிக்கிறது என்றார்.

60 வயதான நடிகர் கோவிந்தா, ‘கூலி நம்பர் 1’, ‘ஆன்ட்டி நம்பர் 1’, ‘ஷோலா அவுர் ஷப்மான்’, ‘ஹம்’, ‘ஸ்வர்க்’, ‘தீவானா மஸ்தானா’, ‘பாகம் பாக்’, ‘ போன்ற பிரபலமான படங்களில் நடித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முடிவெடுப்பார் என்றார்.

Vignesh

Next Post

'சிறையில் ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டது' தந்தை இறப்பு குறித்து மகன் விளக்கம்..!

Fri Mar 29 , 2024
உத்தரப் பிரதேச மாநில சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று முக்தார் அன்சாரி வயிற்று வலி காரணமாக பாண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மரணமடைந்தார். 60வயதான தாதா முக்தார் அன்சாரி கடந்த மார்ச் 23ஆம் தேதி கூட வயிற்று வலியால் 14 மணிநேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 2005ஆம் ஆண்டு […]

You May Like