fbpx

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த ரூ.1.5 கோடி அபராதம் .. உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..

நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது..

2016-17 வருமான வரி கணக்கில், புலி படத்திற்காக நடிகர் விஜய் பெற்ற சம்பளத்தில் ரூ.15 கோடி மறைத்ததாக வருமான வரித்துறை தெரிவித்திருந்தது.. இதற்காக விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்து கடந்த ஜூன் 30-ம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது..

இந்நிலையில் கால தாமதமாக பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு சட்ட விரோதமானது என்பதால் வருமான வரித்துறை பிறப்பித்த அபராத உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதி தடை விதித்தார்.. மேலும் இந்த வழக்கில் செட்டம்பர் 16-ம் தேதிக்குள் வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதி தள்ளி வைத்தார்..

Maha

Next Post

தலையில் கிரீடம் கையில் சூலம்..! பக்தர்களுக்கு ஆசி வழங்கிய அன்னபூரணி..!

Tue Aug 16 , 2022
தலையில் கிரீடம் சூட்டி, கையில் சூலம் ஏந்தி பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் அளித்துள்ளார் அன்னபூரணி. ஆதிபராசக்தியின் மறு அவதாரம் எனக்கூறி ஆசிரமம் நடத்தி வந்த அன்னபூரணி, தலையில் கிரீடம் சூட்டி, கையில் சூலம் ஏந்தி அம்மன் திரைப்பட நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அம்மனாக வேடமிட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ஆயிரம் சர்ச்சைகள் தன்னை சுற்றி வந்தாலும், திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பெண்ணாத்தூர் இராஜாதோப்பு பகுதியில் ஆசிரமம் ஒன்றை அமைத்து […]
தலையில் கிரீடம் கையில் சூலம்..! பக்தர்களுக்கு ஆசி வழங்கிய அன்னபூரணி..!

You May Like