fbpx

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை ஹன்சிகா திருமணம்…

நாடிகர் தனுஷின் மாப்பிள்ளை படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. முதல் படமே இவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து விஜய், சூர்யா, உதயநிதி, ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து சிறப்பான நடிகையாக வலம் வந்தார்.

சிம்புவுடன் ஹன்சிகா காதல் என்று முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர்களின் காதல் பிரேக்-அப் ஆனதாக தகவல்களும் உலா வந்தன. தொடர்ந்து அரண்மனை படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். எனினும் சமீபத்தில் இவரது நடிப்பில் மகா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா.

இந்நிலையில் ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். பிரான்சில் ஈபிள் டவர் முன்னால் நின்று சோகைல் கதுரியா தன்னிடம் காதலை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் ஹன்சிகா பகிர்ந்து இருந்தார். இவர்கள் திருமணம், 450 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் நேற்று நடந்து முடிந்தது. சிந்தி பாரம்பரிய முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்த ஹன்சிகா – சோகைல் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Kathir

Next Post

வீட்டுக் கடன் வாங்கிவிட்டால் தனிநபர் கடன் கிடைக்காதா..? கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க..!!

Mon Dec 5 , 2022
வீட்டுக் கடன் வாங்குவோருக்கு தனிநபர் கடனும் கிடைக்குமா? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக கடன் வாங்குகிறார்கள். குறிப்பாக வீடு கட்டுவதற்கும், கார் வாங்குவதற்கும், திருமண நிகழ்ச்சிகளுக்கும், தொழில் தொடங்குவதற்கும் உள்ளிட்ட பல்வேறு வகையான காரணங்களுக்காக கடன் வாங்குகிறார்கள். இதில், குறிப்பாக பெரும்பாலான மக்கள் கடன் வாங்குவதற்கு வங்கிகளையே நாடுகின்றனர். இந்நிலையில் வீட்டுக் கடன் வாங்குவோருக்கு தனிநபர் கடனும் கிடைக்குமா? என்ற சந்தேகம் […]

You May Like