திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நடிகை குஷ்பு அடுக்கடுக்கான புகார்களை முன் வைத்துள்ளார்.
தமிழக அரசின் மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை அடையாற்றில் பா.ஜ.க. சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பா.ஜ.கவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ மற்றும் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்தும் பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டியும் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ தமிழக முதலமைச்சர் மின்கட்டண விலையை குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்ததும் பால்மற்றும் மின் கட்டண விலையை உயர்த்திவிட்டதாக குற்றம்சாட்டினார். மக்களை பற்றி திமுக கவலைப்படவில்லை என தெரிவித்தார்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியில் உள்ளோம். பெண்கள் பல்வேறு வகைகளில் அட்சியாளர்களால், அமைச்சர்களால் அவமானப்படுத்தப்படுகின்றனர். தொடர்ந்து பேசிய அவர். ஜிஎஸ்.டி முன்பில் இருந்தே உள்ளது. ஆனால் தற்போது தமிழகத்தில் பால் கட்டணம் பால் விலை உயர்வு போன்றவற்றை செய்துவிட்டு மத்திய அரசின் மீது பழி சொல்வதாக கூறினார்.
பெண்கள் இழிவுபடுத்தப்படுவதை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் மன நிலை தான் தமிழக அமைச்சர்களின் நிலை அதை யாரும் தட்டிக் கேட்க முன்வரவில்லை என தெரிவித்தார்.