fbpx

சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணாமல் வாய்ப்பு கிடைக்காது..!! பிரபல நடிகை பரபரப்பு தகவல்..

மாடல் அழகியாக இருந்து திரைத்துறைக்கு வந்தவர் நடிகை ஐஸ்வர்யா சுஷ்மிதா. இவர் தற்போது இந்தி படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக கோலிவுட், பாலிவுட் போன்ற சினிமா துறைகளில் பட வாய்ப்பு அளிப்பதற்காக நடிகைகள், துணை நடிகைகள் படுக்கைக்கு அழைப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா சுஷ்மிதா, தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பகிர்ந்துள்ளார். ஒரு ஆங்கில ஊடகத்தில் அண்மையில் அளித்த பேட்டியில் பேசியுள்ள அவர், “நான் இண்டஸ்ட்ரியில் இருந்த ஆரம்ப காலத்தில் தான், இப்படியெல்லாம் கேள்விப்பட்டேன். நிறைய பேர் நிறைய கதை சொல்வார்கள். நான் அப்போது நடிப்பில் நுழையாத காலகட்டம். மாடலாக மட்டும் இருந்தேன். அப்போது நீங்கள் அவர்களோடு படுக்கையை பகிர்ந்து கொள்ளா விட்டால் வாய்ப்பு கிடைக்காது என்று கூறினர். நிச்சயமாக, அந்த விஷயம் என்னை மிகவும் பாதித்தது. 

சினிமா வாய்ப்புகளை பிடிக்க இது மட்டுமே வழி இல்லை. இங்கு யாரும் நம்மை கட்டாயப்படுத்த முடியாது. அவர்களின் அழைப்பை ஏற்று போக வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவு எடுப்பது நமது கையில்தான் உள்ளது. சினிமாவில் மட்டுமல்ல கார்ப்ரேட் நிறுவனங்களிலும் இருக்கிறது” என கூறியுள்ளார். இது பாலிவுட்டில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Read more ; ஆஸ்கர் அகாடமி நூலகம்..!! ராயன் படத்தின் திரைக்கதை தேர்வு..!! படக்குழு அறிவிப்பு…!!

English Summary

Actresses and supporting actresses are constantly accused of inviting them to bed for film opportunities in the film industry like Kollywood and Bollywood

Next Post

மீண்டும் நிலச்சரிவு-க்கு வாய்ப்பு..!! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Fri Aug 2 , 2024
September to witness more landslides & floods? IMD issues warning around La Nina-triggered rains

You May Like