fbpx

திவாலான காரைக்கால் துறைமுகத்தை ஏலத்தில் எடுக்கும் அதானி குழுமம்..? வெளியான பரபரப்பு தகவல்..!

திவாலான காரைக்கால் துறைமுகத்தை இந்தியாவின் பிரபல தொழிலதிபர் அதானி ஏலம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் நிறுவனத்திடம் காரைக்கால் துறைமுகம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் திவால் ஆகி விட்டதாக தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயம் அறிவித்தது. ஓம்காரா ஏஆர்சி நிறுவனத்திடம் காரைக்கால் துறைமுகம் 2,059 கோடி ரூபாய் கடனாக பெற்றது. வட்டியுடன் சேர்த்து 2,400 கோடி ரூபாயை காரைக்கால் துறைமுகம் திருப்பி செலுத்தாமல் தாமதித்த நிலையில், அந்நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் காரைக்கால் துறைமுகத்துக்கு எதிராக தீர்ப்புகள் வந்தன. இதையடுத்து, தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயத்துக்கு விசாரணை சென்றது. பின்னர், காரைக்கால் துறைமுகம் திவால் அடைந்துவிட்டதாக தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயம் அறிவித்தது.

திவாலான காரைக்கால் துறைமுகத்தை ஏலத்தில் எடுக்கும் அதானி குழுமம்..? வெளியான பரபரப்பு தகவல்..!

இந்நிலையில், தற்போது காரைக்கால் துறைமுகம் ஏலம் விட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த துறைமுகத்தை ஏலம் எடுக்க அதானி நிறுவனம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதானிக்கு போட்டியாக வேதாந்தா நிறுவனம் ஏலத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளன. ஏற்கனவே இந்தியாவின் பல துறைமுகங்கள் அதானி கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், காரைக்கால் துறைமுகம் அவரது கட்டுப்பாட்டுக்குள் வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை மத்திய அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் பெற்றுக்கொடுத்த காரைக்கால் துறைமுகத்தை அதானி கைப்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Chella

Next Post

பெற்றோர்களே கவனம்... அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை...!

Thu Aug 4 , 2022
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் தெரிவித்துள்ளார்கள். இந்த உத்தரவை மீறி இயங்கும் பள்ளி அல்லது கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு நாளை ரெட் அலார்ட் எச்சரிக்கை […]

You May Like