fbpx

அவர் அமைச்சரவையில் நீடிக்கலாமா…..! அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்……!

தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த தவறிவிட்ட திமுக அரசை கண்டிக்கும் விதமாகவும், அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இருக்கின்ற திமுகவைச் சார்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுகவினர் சார்பாக மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதோடு, ஒவ்வொரு பகுதியிலும் தலைமை கழக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதோடு அதிமுகவின் முன்னாள் மற்றும் இந்நாள் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்று கொண்டுள்ளனர்.

திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது எனவும், அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இருக்கின்ற ஒருவர் தமிழக அமைச்சரவையில் நீடிக்க முடியாது, போன்ற கோஷங்களை எழுப்பி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Post

முடிந்தது செந்தில் பாலாஜியின் பைபாஸ் அறுவை சிகிச்சை…..! சிகிச்சைக்கு பிறகு அவரின் நிலை என்ன…..? மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை……!

Wed Jun 21 , 2023
சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு செய்த மருத்துவ பரிசோதனையில் இதயத்தின் முக்கியமான மூன்று ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதற்கு நடுவே ஓமந்தூரார் மருத்துவமனையில் […]

You May Like