ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவுகின்ற கடும் குளிரின் காரணமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது.
சாலை முழுவதிலும் பணி அடர்ந்து காணப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்தானது முற்றிலும் தடைப்பட்டு இருக்கிறது. வீடுகள் கட்டிடங்களின் மேல் பணி மூடப்பட்டு இருப்பதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்ற கடுமையான பனிப்பொழிவின் காரணமாக 150 க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்து இருக்கின்றனர்.
மேலும் 20 மாகாணங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளும் பலியாகி இருக்கின்றன. தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொண்டு நிறுவனங்கள் பேரிடர் காலங்களில் தங்களது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.