fbpx

கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி.. கண்காணிப்பு தீவிரம்…

கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது..

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என்பது பன்றிகளை பாதிக்கும் மிகவும் ஆபத்தான வைரஸ் நோயாகும். இந்த தொற்று முதன்முதலில் ஆப்பிரிக்காவில் 1920 இல் விலங்குகளில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் வயநாடு மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. பன்றிகளிடம் இருந்து இந்த வகை வைரஸ் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாது என்று விலங்குகள் நலத்துறை தெரிவித்துள்ளது..

எனினும் பாதிக்கப்பட்ட பன்றிகளுடம் தொடர்பு கொள்ளும் மனிதர்கள் மூலம் மற்ற பன்றிகளுக்கு இந்த வைரஸ் பரவக்கூடும்.. இந்த சூழலில் கேரளாவில் உள்ள அனைத்து பன்றி பண்ணைகளிலும் கண்காணிப்பை கடுமையாக்க உத்தரவிடப்பட்டுள்ளது..

மேலும் பிற மாநிலங்களில் இருந்து பன்றிகளை இறக்குமதி செய்ய கேரள அரசு தடை விதித்துள்ளது.. கடந்த வாரம் உத்தரப்பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு பதிவாகியுள்ளன.. இந்த மாத தொடக்கத்தில் பீகார் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து கேரள அரசு ஏற்கனவே கண்காணிப்பை கடுமையாக்கியது.

Maha

Next Post

தமிழக மக்களே மீண்டும் ஓர் அதிர்ச்சி செய்தி..! இனி வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் மீட்டருக்கும் வாடகை..!

Fri Jul 22 , 2022
இனி வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மின் மீட்டர்களுக்கும் வாடகை வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மின்சாரத்துறை கடுமையான நிதிச்சுமையில் சிக்கி இருப்பதால் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு போராட்டங்களையும் அறிவித்துள்ளன. இந்நிலையில், மின்சார வாரியம் மின்நுகர்வோருக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளது. அதாவது, வீடுகளில் பயன்படுத்தப்பட்டு […]

You May Like