fbpx

குஷ்புவை தொடர்ந்து தந்தையால் பாலியல் தொல்லைக்கு ஆளான தலைவி..!! படுக்கையின் கீழ் ஒளிந்து கொண்ட சோகம்..!!

8 வயதில் தனது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். பெற்ற மகளை, ஒரே மகளை பாலியல் துன்புறுத்தல் செய்வதும் மனைவியை அடிப்பதையும் அவர் ஆணுக்கு உரிய பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தார். 8 வயதில் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது அப்போது எதிர்க்கும் துணிவு இல்லை. 15 வயதில் தான் அந்த துணிவு வந்தது. சின்ன வயதில் நடந்த அந்த சம்பவத்தின் பாதிப்பு வாழ்க்கை நெடுகிலும் இருப்பது தான் துயரம் என்று வெளிப்படையாக பேசியிருந்தார் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு.

இந்நிலையில், குஷ்புவை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மாலிவாலும் இதே போன்ற மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரும் சிறுவயதில் தனது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பரபரப்பு புகாரை கூறியிருக்கிறார். டெல்லியில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுவாதி மாலிவால், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நான் சிறுமியாக இருந்தபோது என் தந்தை என்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். என்னை அடித்து துன்புறுத்துவார். தலைமுடியை பிடித்து சுவரில் கொடூரமாக தாக்குவார். வெளியே சென்று அவர் எப்போதெல்லாம் வீட்டுக்கு வருவாரோ அப்போது நான் பயந்து படுக்கைக்கு கீழ் சென்று ஒளிந்து கொள்வேன்” என்று கூறியுள்ளார்.

Chella

Next Post

”நீ இப்படி பண்ணிட்டு வந்து நிக்கிறியே இனி யாரு பொண்ணு கொடுப்பா”..? தந்தையை போட்டுத்தள்ளிய மகன்..!!

Sun Mar 12 , 2023
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே கருவேப்பிலை கட்டளை ஊரைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (48). இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், தனது 2 மகன்கள், 3 மகள்களுடன் வசித்து வருகிறார். இதில் யாருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில், அர்ஜுனனின் இளைய மகன் அருண் (24) திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்கு தன்னுடன் வேலை செய்யும் பெண்ணை காதலித்தும் வந்துள்ளார். தங்களது காதல் விவகாரத்தை அருண் தனது தந்தையிடம் […]
”நீ இப்படி பண்ணிட்டு வந்து நிக்கிறியே இனி யாரு பொண்ணு கொடுப்பா”..? தந்தையை போட்டுத்தள்ளிய மகன்..!!

You May Like