fbpx

கல்லூரி விடுதியில் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நர்சிங் மாணவி……!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையறும்பு பழைய பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கன்னியப்பன் இவருடைய மகள் கார்த்திகா ஜோதி(18) இவர் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள காமாட்சிபுரம் பிரிவு அருகே தனியார் கல்லூரியில் சக்தி நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்த சூழ்நிலையில், கடந்த 21ஆம் தேதி விடுதியின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்ததாக தெரிவித்து ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவர் நேற்று திடீரென்று உயிர் இழந்தார்.

இந்த நிலையில், கார்த்திகா ஜோதியின் உடலை திண்டுக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றார்கள். அதோடு தனியார் நர்சிங் கல்லூரி மற்றும் திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இது ஒருபுறம் இருக்க மாணவியின் உயிரிழப்பின் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் மருத்துவமனை உண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

முதன்முதலில் கொரோனா வைரஸ் இப்படி தான் பரவியது.. அமெரிக்கா வெளியிட்ட புதிய தகவல்..

Mon Feb 27 , 2023
2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனா உன் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.. இந்நிலையில் சீனாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் என்று அமெரிக்காவின் எரிசக்தி துறை கூறியுள்ளது. அமெரிக்க […]

You May Like