fbpx

50 சவரன் நகைகளை குறைத்து கூறிய ஐஸ்வர்யா..!! செம கடுப்பில் ரஜினி..!! விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸ்..!!

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா கடந்த மாதம், தன்னுடைய நகை லாக்கரில் வைக்கப்பட்டிருந்த, சுமார் 60 சவரன் நகைகள் காணாமல் போனதாக சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ரஜினிகாந்தின் வீட்டில் வேலை செய்த, ஈஸ்வரி என்பவர் வசமாக சிக்கினார். அதே போல் அவருக்கு உதவியாக இருந்தது ட்ரைவர் வெங்கடேஷ் என்பதும் தெரியவந்தது. ஐஸ்வர்யாவின் நகையை விற்று கிடைத்த பணத்தில், மகளுக்கு திருமணம், ரூ. கோடியில் வீடு என ஜெகஜோதியாக வாழ்ந்தது மட்டும் இன்றி, கணவருக்கு காய்கறி கடையும் வைத்து கொடுத்துள்ளார். அதே போல், வெங்கடேஷனும் பணத்தை தண்ணீர் போல் செலவு செய்து என்ஜாய் செய்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னிடம் இருந்த 60 பவுன் நகை மட்டுமே காணாமல் போனதாக கூறிய நிலையில், ஈஸ்வரி மற்றும் வெங்கடேஷ் இருவரும் தந்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது ஐஸ்வர்யாவின் வீட்டிலிருந்து, இவர்கள் இருவரும் சுமார் 110 சவரன் திருடியுள்ளதாக தெரிகிறது. இது தான், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 50 பவுன் குறித்து சொல்லாமல் மறைத்ததற்கு காரணம் என்ன என விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில், பல நகைகள் அதில் இருந்ததால், சரியாக நியாபகம் இல்லை. என்னுடைய நண்பர்கள் கொடுத்த நகையும் அதில் தான் இருந்தது என ஐஸ்வர்யா சமாளித்துள்ளார். பொதுவாக 5 பவுன் நகை தொலைந்தாலே 7 பவுன் தொலைந்து விட்டது என கூறுபவர்கள் மத்தியில் ஒன்றல்ல… இரண்டல்ல 50 பவுன் குறைத்து கூறி… ரஜினியும் இந்த சிக்கலில் சிக்க வைத்துள்ளாராம் ஐஸ்வர்யா என சில தகவல்கள் அரசல் புரசலாக கூறப்படுகிறது. 

ரஜினி நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் அதிகபட்சமாக 80 கோடிக்கு மேல் தான் சம்பளமாக பெறுகிறார். இப்படி சம்பாதிக்கும் பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த தொழில் மூலம் கிடைக்கும் லாபம் போன்றவற்றிற்கு அவர் எப்படி வருமான வரி செலுத்தி வருகிறார் என்பது தெரியவில்லை. ஏற்கனவே இந்த நகைகள் குறித்து வெளியான தகவலில் இது ஐஸ்வர்யாவுக்கு அவரின் தந்தை திருமணத்திற்கு போட்ட நகைகள் என கூறப்பட்ட நிலையில், எப்படி அவர் இந்த நகை பற்றிய தகவலை நினைவில் வைக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. விசாரணையில் கூட, இந்த நகைகளுக்கு ரசீது உள்ளதா? யார் பணத்தில் வாங்கப்பட்டது என்பது போன்ற கேள்விகளும் சுற்றி வருகிறது. 50 பவுனை குறைவாக கூறியதன் பின்னணி என்ன? என்று கேள்வி ஒருபுறம் எழ மக்களால் மண்டை காய்ந்து கடுப்பில் உள்ளாராம் ரஜினிகாந்த்.

Chella

Next Post

அடுத்த ஆபத்து.. ஆப்பிரிக்காவில் எபோலாவை போல பரவும் மற்றொரு கொடிய வைரஸ்.. 5 பேர் பலி...

Mon Mar 27 , 2023
ஆப்பிரிக்காவில் மார்பர்க் என்ற ஆபத்தான வைரஸ் பரவி வருகிறது.. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஈக்குவடோரியல் கினியா நாட்டில் 9 பேருக்கு மார்பர்க் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.. இந்த மார்பார்க் வைரஸுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது சிகிச்சை இல்லை.. தான்சானியாவின் வடமேற்கு ககேரா பகுதியிலும் வைரஸ் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தான்சானியாவில் கடந்த வாரத்தில் மட்டும் மார்பர்க் வைரஸ் காரணமாக, 8 பேர் பாதிக்கப்பட்டனர், 5 பேர் உயிரிழந்தனர்.. ஈக்குவடோரியல் […]

You May Like