fbpx

அலெர்ட் வந்தாச்சு!. வங்கக்கடலில் புயல் சின்னம்!. வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

Weather update: தெற்கு வங்கக்கடலில் இன்று அல்லது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி(புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவும் மேலெடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: இஸ்ரேல் – ஹமாஸ் தொடர் தாக்குதல்!. காசாவில் 43 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்!.

English Summary

Alert has arrived!. Storm signal in the Bay of Bengal!. Meteorological Department update!

Kokila

Next Post

இங்கிலாந்தில் வெடித்த போராட்டம்!. குவியல் குவியலாக தேங்கிய குப்பைகள்!. புழுக்கள், நரி, எலிகள் தொல்லையால் மக்கள் கடும் அவதி!

Mon Apr 7 , 2025
Protests erupt in England!. Piles of garbage piled up!. People are suffering greatly due to the nuisance of worms, foxes, and rats!

You May Like